search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
    X

    குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு

    • குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
    • விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார்.
    பெரம்பலூர்:


    தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கவுல்பாளையம் தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் சங்க தலைவராக உத்திரக்குமார், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜன், துணைத் தலைவராக, செங்கமலை, துணை செயலாளராக முருகையா செயற்குழு உறுப்பினர்களாக அன்பு, கோபி என்கிற கோபாலகிருஷ்ணன், கண்ணன், ரவிச்சந்திரன், கலாவதி, ராதாகிருஷ்ணன், அசோகன், பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெரம்ம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். புதிய பொறுப்பாளகளை பணியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×