search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 46 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு
    X

    தமிழகத்தில் 46 இன்ஸ்பெக்டர்கள் டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

    • கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.
    • நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உட்பட தமி ழகத்தின் 46 இன்ஸ்பெக்டர் களை டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா நேற்று உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் தலைவா சல் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், நீலகிரி மாவட்ட குற்றப்பி ரிவு டி.எஸ்.பி ஆகவும், சேலம் மாநகர ரவுடிகள் கண்காணிப்பு (ஓ.சி.ஐ.யூ) பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா ரவி தங்கம், கிருஷ்ண கிரி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஆகவும், நாமக்கல் மாவட்டம் தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு இன்ஸ் பெக்டர் ராஜா, சேலம் மாவட்டம் சங்ககிரி உட் கோட்ட பிரிவு டி.எஸ்.பி ஆகவும் நியமிக்கப்பட்

    டுள்ளனர்.

    இவர்கள் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள். மேலும் தஞ்சாவூர் மாவட்டம், புதுக்கோட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சேலம் மாந கரம் அன்னதானப்பட்டி சரக உதவி கமிஷனர் ஆகவும், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம், சேலம் மாநகரம் அம்மாபேட்டை சரக உதவி கமிஷனர் ஆகவும் நியமிக்கப்பட்டு விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள்.

    Next Story
    ×