search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POSTGRADUATE"

    • இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விழுப்புரம், அக்.21-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ ,மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற மற்ற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு கல்லுரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை யோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • சென்டாக் நிர்வாகம் அறிவிப்பு
    • நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதுநிலை மருத்துவ படிப்புகள் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி, பி.ம்.ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா, முதுநிலை பல் மருத்துவ படிப்புகள் கோரிமேடு மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரி, மாகி பல் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் உள்ளது.

    இந்த கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக மேலாண்மை ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம், அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு என்.ஆர்.ஐ. பிரிவின் கீழ் படிப்பதற்கு சேர்க்கைக்கு 30-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வரும் 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்கள் சென்டாக் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அரசு ஒதுக்கீட்டு பொது பிரிவினருக்கு ரூ.3 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.ஆயிரத்து 500, நிர்வாக ஒதுக்கீட்டில் பொது ரூ.5 ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி ரூ.2 ஆயிரத்து 500, என்.ஆர்.ஐ ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

    எம்.டி.எஸ் சேர்க்கை விண்ணப்பிக்கும் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புடன் ஓராண்டு மருத்துவ பயிற்சியை ஜூன் 30-ந் தேதிக்கு முன்பு முடித்திருக்க வேண்டும். எம்.டி.ஸ் படிப்புக்ககு மார்ச் 31-ந் தேதிக்கு முன் ஓராண்டு பல் மருத்துவ பயிற்சியை முடித்திருக்க வேண்டும். சீட் மேட்ரிக்ஸ் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி தொடங்கி வைத்து, பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். அந்த மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கல்லூரியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்வதற்கு வழிகாட்டி, அறிவுரை வழங்கி சேர்க்க வேண்டும். முடிந்தவரை அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும், என்றார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் ஆகியோர் வழிகாட்டுதல் விளக்கங்களை அளித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

    ×