மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் தொடங்கி வைத்தார்
மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Published on

அரியலூர்:

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மேற்படிப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் ஜோதிமணி தொடங்கி வைத்து, பிளஸ்-2 முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரியில் சேர வேண்டும். அந்த மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கல்லூரியில் சேராத மாணவர்களை கல்லூரியில் சேர்வதற்கு வழிகாட்டி, அறிவுரை வழங்கி சேர்க்க வேண்டும். முடிந்தவரை அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு அறிவுரை வழங்க வேண்டும், என்றார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் ஆகியோர் வழிகாட்டுதல் விளக்கங்களை அளித்தனர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com