search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pori"

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது.
    • இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.

    பரமத்திவேலூர்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உற்பத்தி செய்யப்படும் பொரிக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விளையும் பவானி அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுவதே காரணமாகும்.

    விறுவிறுப்பு

    ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் பரமத்திவேலூர் பகுதியில் பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது.

    பரமத்திவேலூர், சுல்தான்பேட்டையில் விறகுகளில் நெருப்பு மூட்டி மண் அடுப்பில் வைத்து தயார் செய்யப்படும் பொரி சுவையாக இருக்கும். இதனால் மக்கள் இந்த பொரிகளையே விரும்பி வாங்குகின்றனர். மொத்த ஆர்டர்களும் குவிகின்றது.

    ரூ.450 ஆக உயர்வு

    அதே சமயம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சுல்தான்பேட்டை பொரி உற்பத்தியாளர் ராமசாமி கூறியதாவது:-

    பரமத்திவேலூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொரியை நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    சுவை மிகுந்தது

    உப்பு, சோடா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பொரி தயார் செய்யப்படுகிறது. அதனால் மற்ற பகுதிகளில் தயார் செய்யப்படும் பொரியை காட்டிலும் இங்கு தயாராகும் பொரியின் சுவை அலாதியாக இருக்கும். கர்நாடகா மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பவானி நெல்லை கொள்முதல் செய்து பொரி தயாரிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட ஒரு மூட்டை பொரி 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் நெருங்கும் சமயத்தில் அதன்விலை 400 ரூபாயாக உயரும்.

    ஆனால் நடப்பாண்டில் தற்போதே விலை உயர்ந்து ஒரு மூட்டை பொரி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கும் சமயத்தில் இதன் விலை 550 ரூபாய் வரை ஏற்றம் காண வாய்ப்புள்ளது. இந்த விலையேற்றத்துக்கு அரிசி விலை உயர்வு முக்கிய காரணம்.

    ரூ.1500 செலவாகிறது

    கர்நாடகாவில் இருந்து நெல்லை கொண்டு வந்து பொரி தயாரிப்பதற்கான செலவு 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பொரி விலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளதால் பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    காவேரிப்பட்டணம்:

    நாடு முழுவதும் நாளை (18-ந் தேதி) ஆயுதபூஜையும், நாளை மறுநாள் 19-ந் தேதி விஜயத சமியும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில் வணிக பெருமக்கள் தங்களது தொழிலகங்களுக்கும், மாணவ, மாணவியர் தங்களது கல்வி புத்தகங்களுக்கும், மகளிர் தங்களது வீடுகளிலும் வெகுவிமர்சையாகபூஜை செய்வர். இப்பூஜையில் கலந்துகொள்வோருக்கு பூஜை செய்த பொரியை அன்பளிப்பாக வழங்குவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். 

    இந்த ஆண்டு ஆயுத பூஜைக்காக வேண்டி காவேரிப்பட்டணம் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு பகலாக பொரி உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொரி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது சீசன் களைகட்டியுள்ளதால் இரவு, பகலாக வேலை நடைபெற்று வருகிறது. மூலப்பொருட்கள், மின் கட்டணம், ஆட்கள் கூலி ஆகியவை உயர்ந்துள்ளதால் கடந்தாண்டு ரூபாய் 330-க்கு விற்கப்பட்ட 50 படி கொண்ட மூட்டை இந்த ஆண்டு சுமார் 380 முதல் 400வரை விற்கப்படுகிறது. இந்த ஆண்டு 30முதல்50 ரூபாய் விலை உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×