search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "policeman suspended"

    • போலீஸ்காரரின் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.
    • இளம்பெண்ணின் கணவருக்கும், போலீஸ்காரருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

    பெரம்பூர்:

    செம்பியம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூரை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் நிலம் தொடர்பாக புகார் தெரிவிக்க செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

    இந்த புகாரை ஆரம்பத்தில் போலீஸ்காரர் வினோத்குமார் விசாரித்ததாக தெரிகிறது. அப்போது இளம்பெண்ணின் செல்போனை பெற்ற அவர் அடிக்கடி உருக உருக மெசேஜ் அனுப்ப தொடங்கினார்.

    காலையில் குட்மார்னிங், இரவில் குட்நைட் என நீண்ட இந்த மெசேஜ் நாளடைவில் பாலியல் ரீதியாக மாறியது.

    போலீஸ்காரரின் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் போலீஸ்காரர் வினோத்குமாரை கண்டித்ததாக தெரிகிறது.

    எனினும் இதனை போலீஸ்காரர் வினோத்குமார் கண்டுகொள்ளாமல் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்தார். இதனால் இளம்பெண் போலீஸ்காரரின் மெசேஜ் மற்றும் போன்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டார்.

    இதனால் இளம்பெண்ணின் கணவருக்கும், போலீஸ்காரருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீஸ்காரர் வினோத்குமார் அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த போலீஸ்காரர் வினோத்குமாரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டாா் வாகனப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ராஜசேகா்
    • ரூ.35 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகர காவல் நிலையத்தில் மோட்டாா் வாகனப் பிரிவு காவலராக பணியாற்றி வருபவா் ராஜசேகா் (வயது 47). இவா் மாநகர காவல் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததில் ரசீது வழங்காமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில் இது குறித்து மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபினபு ஆய்வு மேற்கொண்டதில், வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் அடித்ததாக காவலா் ராஜேசகா் ரூ.35 லட்சம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். 

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட காசிமேடு போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து வடசென்னை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருபவர் வேல்ராஜ்.

    இவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த லாரன்ஸ், சந்தோஷ் காசிமேடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் விமல் குமார் ஆகியோர் நடைபாதையில் மது அருந்தினர்.

    மேலும் மதுபோதையில் இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகியவற்றையும் சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனை கீழ்ப்பாக்கம் போலீஸ்காரர் வேல்ராஜ் தட்டிக்கேட்டபோது அவரையும் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் லாரன்ஸ், சந்தோஷ் இருவரையும் கீழ்ப்பாக்கம் போலீசார் கைதுசெய்தனர்.

    இந்தநிலையில் ரகளையில் ஈடுபட்ட காசிமேடு போலீஸ்காரர் விமல் குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து வடசென்னை இணை ஆணையர் துரைகுமார் உத்தரவிட்டுள்ளார்.
    பொறையாறு அருகே கடத்தல் தங்கத்தை பங்கு போட முயன்ற போலீசார் 3 பேரை சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். #Smugglinggold
    பொறையாறு:

    இலங்கையில் இருந்து வேதாரண்யம் வழியாக சென்னைக்கு அரசு பஸ்சில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கடந்த 1-ந் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனால் அன்று மதியம் 1 மணியளவில் நாகை மாவட்டம் பொறையாறு அடுத்த நண்டாலார் சோதனை சாவடியில் பொறையாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரர் ஜெயபால், வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்காரர் விஜயகுமார் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பஸ்சில் ஒரு பை இருந்தது. இந்த பையை போலீசார் யாருடையது? என்று கேட்டனர். ஆனால் யாரும் உரிமை கோரவில்லை.

    இதனால் போலீசார் 3 பேரும் , அந்த பையை சோதனை செய்தபோது அதில் 3 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பையை பறிமுதல் செய்துகொண்டு எடுத்து சென்றனர்.

    இதற்கிடையே சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு காரில் 3 பேர், சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த ஜெயபால், சீனிவாசன், சதீஷ் ஆகியோர் கடத்தல் தங்கத்தை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் உங்களுக்கு ரூ.20 லட்சம் தருகிறோம் என்று தெரிவித்தனர்.

    ஆனால் போலீசார் 3 பேரும், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை என்று மறுத்து விட்டனர். இதை கேட்டு காரில் வந்த 3 பேரும் திரும்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு நபர், அரசு பஸ்சில் வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை போலீசார் 3 பேரும் பறிமுதல் செய்து பங்குப்போட்டு கொண்டு விட்டனர் என்று கூறினார்.

    இதையடுத்து சீர்காழி டி.எஸ்.பி. சேகர் தலைமையில் போலீசார் விரைந்து நண்டாலார் சோதனை சாவடிக்கு சென்று அங்கு இருந்த சீனிவாசன், ஜெயபால், சதீசிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்யவில்லை என்று மறுத்தனர்.

    பின்னர் நாகை எஸ்.பி. விஜயகுமார் நேரிடையாக 3 போலீசாரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து 3 போலீசாரும், கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்ததை ஒப்புக்கொண்டனர். 3 பேரும் தங்கத்தை விற்று பங்கு போட முடிவு செய்திருந்ததையும் தெரிவித்தனர். சோதனை சாவடி அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் குழிதோண்டி புதைத்து இருப்பதையும் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடத்தல் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கடத்தல் தங்கத்திற்கு பேரம் பேச வந்த 3 பேர் காரில் தப்பி சென்று விட்டதால் அவர்களை தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே கடத்தல் தங்கத்தை பங்கு போட முயன்ற போலீசார் ஜெயபால், சீனிவாசன், சதீஸ் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    கடத்தல் தங்கத்தை பதுக்கிய சம்பவத்தில் 3 போலீசார் சஸ்பெண்டு செய்யப்பட்ட விவகாரம் நாகை மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. #Smugglinggold

    ×