search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic godown fire"

    வேடசந்தூர் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் அருகே வேடசந்தூர் பாரதிநகரில் சவடமுத்து என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யும் குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு இடங்களில் இருந்து பெறப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து மறு சுழற்சி செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. குடோன் முழுவதும் பரவியதால் அப்பகுதி முழுவதும் இரவிலும் பகல் போல் காட்சியளித்தது.

    இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியாததால் திண்டுக்கல்லில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு போராடி தீயை அணைத்தனர்.

    இருந்தபோதும் குடோனில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டியூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக் கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானது.

    மதுரை:

    மதுரையை அடுத்த டி.பெருங்குடியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 38). இவர் வண்டியூர் ராணி மங்கம்மாள் சாலையில் பிளாஸ்டிக் குடோன் நடத்தி வருகிறார். நேற்று இரவு குடோனை மூடிவிட்டுச் சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.

    அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தல்லாகுளம், பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

    2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே அண்ணாநகர் போலீசில் ஸ்டாலின் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தில் சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். வண்டியூர் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி அரியமங்கலத்தில் நேற்று மாலை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எதிர் வீட்டில் வசித்த மூதாட்டி அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
    திருவெறும்பூர்

    திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு அருகில் உள்ள  ஜெகநாதபுரத்தில் அழகர் மற்றும் சுடர்மணி ஆகியோருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் சேகரிப்பு குடோன் உள்ளது. சுமார் 20 வருடமாக செயல்படும் இந்த பிளாஸ்டிக் குடோனில் பழைய பிளாஸ்டிக்கை தரம் பிரித்து அதனை தூளாக்கி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்தனர். 

    இந்த நிலையில் நேற்று மாலை அந்த குடோனில் தீப்பற்றியது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இதையடுத்து நள்ளிரவு மீண்டும் குடோனில் தீப்பற்றியது. அப்பகுதியினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. 

    மேலும் திறந்தவெளியில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததால் அதில் பற்றிய தீயானது காற்றின் வேகம் காரணமாக பரவியது. 

    இதையடுத்து அவர்கள் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத் திற்கு வந்த கண்டோன் மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலர் தனபால் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். பிளாஸ்டிக் என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தாலும் தீயை கட்டுக்குள் கொண்டு தீயணைப்பு துறையினர் போராடினர். 

    5 தீயணைப்பு வாகனங்கள், 6 தண்ணீர் லாரிகள் மூலம் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தினர். 

    இதற்கிடையில் பிளாஸ்டிக் குடோனில் தீப்பற்றி எரிந்ததை பார்த்த கூச்சலிட்ட எதிர் வீட்டுக்காரரான சரோஜா (65) என்பவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரோ கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதில் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். ஆகவே உயிரிழப்பு ஏற்படுத்துவதற்கு முன் இந்த கட்டிடத்தினை இடித்து தரை மட்டமாக்க வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதியில் இதுபோன்ற குடோன்களை வைக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதியளிக்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தீ விபத்து ஏற்பட்ட குடோன்களுக்கு அருகில் குடியிருப்புகள், மர அறுவை மில் உள்ளன. அதிர்ஷ்டவசமாக அவைகள் தப்பின. இந்நிலையில் தீயணைக்கப்பட்ட குடோனில் மீண்டும் இன்று காலை தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

    தீ தொடர்ந்து எரிவதால் அதில் வரும் கரும்புகையானது அதன் சுற்று வட்டார பகுதியில் பரவி பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரும் வரை நிரந்தரமாக ஒரு தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி கண்காணிக்க வேண்டும். இல்லையேல் அருகில் உள்ள மர அறுவை மில், பர்னிச்சர் தயாரிக்கும் ஆலை, குப்பை கிடங்கு ஆகியவற்றில் தீப்பிடித்து பேராபத்தை ஏற்படுத்தும் என அப்பகுதியினர் தெரிவித்தனர். 

    மேலும் தீப்பற்றி எரிந்த குடோனுக்கு அருகிலேயே 2 பிளாஸ்டிக் குடோன் உள்ளது . இதுபோன்று விபத்து ஏற்படுத்துவதற்கு முன் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். #tamilnews
    தெற்கு டெல்லியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    தெற்கு டெல்லியின் மால்வியாநகர் பகுதியில் ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி நேற்று மாலை திடீர் என்று தீப்பிடித்தது.

    தீ மளமள வென்று எரிந்தது. அருகில் இருந்த குடோனுக்குள் பரவியது. அதில் இருந்த ரப்பர் மற்றும் பிளாஸ்டிக்குகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. இதனால் தீ அணைக்க முடியாத அளவுக்கு விடிய விடிய எரிந்து கொண்டே இருந்தது.

    தீயணைப்பு படை வீரர்கள் 25 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். என்றாலும் தொடர்ந்து தீ புகை மூட்டத்துடன் எரிந்து கொண்டே இருந்தது. டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் புகை பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று மேலும் 10 தீயணைப்பு வாகனங்களும் விமானப்படை ஹெலிகாப்டரும் தீயணைக்கும் பணிக்கு உதவிக்கு வரவழைக்கப்பட்டது. 16 மணி நேரத்துக்கும் மேல் பற்றி எரிந்த தீ இன்று காலை கட்டுப்படுத்தப்பட்டது என்றாலும் தொடர்ந்து புகை மூட்டம் வந்து கொண்டே இருந்தது.

    அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தீயில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் கடும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #tamilnews

    ×