என் மலர்
நீங்கள் தேடியது "Parents Arrest"
- வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
- பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஒடுகத்தூர்:
ஒடுக்கத்தூரை அடுத்த பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 30). இவரது மனைவி டயானா (20). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மாதம் 27-ந் தேதி மாலை ஒடுக்கத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயானாவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்ததாகக்கூறி பச்சிளம் பெண் குழந்தை உடலை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டுக்கு பின்னால் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த டயானாவின் தந்தை சரவணன் பச்சிளம் குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாருக்கு தெரியாமல் பின்வாசல் வழியாக குழந்தையின் பெற்றோர் இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர். வேப்பங்குப்பம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அணைக்கட்டு தாசில்தார் வேண்டா முன்னிலையில், பச்சிளம் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வில் குழந்தை நலமுடன் இருந்ததாகவும், அதே போல உடல் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் எந்தவித காயமும் ஏற்படவில்லை. குறிப்பாக வீட்டிற்கு அருகில் இருந்த பப்பாளி மரம் மற்றும் எருக்கஞ்செடி உடைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இவற்றின் பாலை குழந்தைக்கு ஊற்றி கொன்று இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில், தலைமறைவான கொலை செய்யப்பட்ட குழந்தையின் பெற்றோரான சேட்டு மற்றும் டயானாவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (வயது 39). இவரது மனைவி நித்தியகமலா (35). முத்துப்பாண்டியன் உடற்கல்வி ஆசிரியர் ஆவார். நித்திய கமலா ஆசிரியை படிப்பு முடித்துள்ளார்.
நித்தியகமலா மகள் லத்திகாஸ்ரீ (5). இந்நிலையில் நேற்று வீட்டில் படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததால் லத்திகாஸ்ரீயை அவரது பெற்றோர் குக்கர் மூடியால் கண் மூடித்தனமாக அடித்ததோடு, அவளை வீட்டின் வெளியே வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது.
இதனால் லத்திகாஸ்ரீ மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் முதலில் சிறுமியை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடல் நிலை மோசம் அடைந்ததால் லத்திகாஸ்ரீயை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு டாக்டர்கள் லத்திகாஸ்ரீயின் முதுகில் நீளமாக பல இடங்களில் கோடு கோடாக ரத்தகாயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது எதனால் ஏற்பட்டது என தாய் நித்திய கமலாவிடம் கேட்டபோது அவர் லத்திகாஸ்ரீ படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததால் வீட்டிற்கு வெளியே வெயிலில் நிற்க வைத்து அடித்து தண்டனை கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை நித்தியகமலாவும், முத்து பாண்டியனும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே படிக்காமல் டி.வி., பார்த்த மகளை தாயே சரமாரியாக அடித்து வெயிலில் நிற்க வைத்து கொடூரமாக கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோடை விடுமுறையில் பள்ளி இல்லாத நிலையில் மதியம் 12 மணிக்கு படிக்காததால் பெற்ற மகளை தாய் அடித்து வெயிலில் நிற்க வைத்து துன்புறுத்தி கொலை செய்வாரா? இதற்கு வேறு காரணம் உள்ளதா? என காட்டுபுத்தூர் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆசிரியை நித்தியகமலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கீழபாடி தாலுகா அழகிரி கவுண்டனூர் என்ற கிராமம் சொந்த ஊராகும். இவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு லத்தி ஸ்ரீ பிறந்துள்ளார். மகள் பிறந்தது முதல் பிரசன்னாவுடன் தொடர்ந்து நித்திய கமலாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நித்தியகமலா பிரசன்னாவை விட்டு பிரிந்து விட்டார். 2016-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் முத்து பாண்டியனை திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து கணவர் முத்துப்பாண்டியனிடம் கேட்ட போது , அவர் டிபன் வாங்கி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகுதான் நித்திய கமலா மகள் லத்திகாஸ்ரீயை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால் தென்னை மட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதாலும், வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாலும் உடல் நிலை மோசமடைந்து லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டாள்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் முத்துப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடினர். நேற்றிரவு சேலத்தில் பதுங்கி இருந்த போது காட்டுப்புத்தூர் போலீசில் முத்துப்பாண்டியன் சிக்கினார். முத்துப் பாண்டியன் , நித்திய கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கயா மாவட்டம் பட்வா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த வாரம் திடீர் என்று காணாமல் போய்விட்டார்.
நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் சிறுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது உடலை போலீசார் மீட்டனர். தலையை தேடியபோது அருகில் சற்று தொலைவில் வயலில் கிடந்ததை கண்டுபிடித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர். #Honourkilling






