search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parent-Teacher"

    • காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா தலைமை தாங்கி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி ஆங்கிலத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகன், மகளின் படிப்பு குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.
    • உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

    கீழக்கரை

    கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டிற்கு பெற்றோர் -ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றது. கல்லூரி கலையரங்கத்தில் இறை வணக் கத்துடன் தொடங்கியது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தேன்மொழி வரவேற்றார்.

    கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய கல்லூரி விதிமுறைக ளையும் கல்வியின் முக்கியத் துவத்தையும் எடுத்து ரைத்தார்.

    மேலும் ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தொடர்பு இயக்குனர்இர்பான் அகமது மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் பயிற்சி வகுப்புகள் பற்றியும், பெற்றோரும் மாணவிகளின் ஒழுக்க நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்து ரைத்தார்.

    தொழில் முனைவோர் இயக்குனர் ரோசி பெர்னா ண்டஸ் கல்லூரியில் படிக்கும் போதே மாணவி கள் தொழில் வல்லுனராக உருவாகுவது குறித்து மாணவிகளுக்கு விளக்கி னார். முடிவில் தமிழ்த் துறை உதவிப்பேராசிரியை தேன்மொழி நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை சீதக்காதி அறக்கட்ட ளையின் துணை பொது மேலாளர் ஷேக் தாவூது கான் மற்றும் பேராசிரியர் கள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாண விகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்லூரி செயலர் அ.பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சென்னை, மைன்ட் ப்ரஷ் டிரைனிங்க் அகாடமியின் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "சுய மதிப்பு மிகவும் முக்கியம். மாணவர்களிடம் உள்ள தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டவும் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    நம்முடைய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். விதிகளும் கட்டுப்பாடுகளும் இருந்தால் மட்டுமே மனிதன் வாழ்வில் சிறக்க முடியும். ஆகவே மாணவர்களுக்கு விதிகளை கடைபிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டின் சூழ்நிலையை உணர்த்த வேண்டும். அவ்வாறு உணர்த்தினால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். குழந்தைகளிடம் பேசும்பொழுது மறைமுகமாக எடுத்து சொல்ல வேண்டியதை மறைமுகமாகவும், நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் சொல்ல வேண்டும் என்றார். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். வேதியியல் துறைத் தலைவர் பார்வதி நன்றி கூறினார். இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×