என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
- காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
- பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா தலைமை தாங்கி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி ஆங்கிலத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகன், மகளின் படிப்பு குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story






