search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டம்
    X

    பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டம்

    • பெற்றோர்-ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கல்லூரி செயலர் அ.பா.செல்வராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். சென்னை, மைன்ட் ப்ரஷ் டிரைனிங்க் அகாடமியின் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், "சுய மதிப்பு மிகவும் முக்கியம். மாணவர்களிடம் உள்ள தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டாமல் அவர்களிடம் உள்ள நல்ல விஷயங்களைப் பாராட்டவும் வேண்டும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

    நம்முடைய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைக் கொடுக்க வேண்டும். விதிகளும் கட்டுப்பாடுகளும் இருந்தால் மட்டுமே மனிதன் வாழ்வில் சிறக்க முடியும். ஆகவே மாணவர்களுக்கு விதிகளை கடைபிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளுக்கு வீட்டின் சூழ்நிலையை உணர்த்த வேண்டும். அவ்வாறு உணர்த்தினால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள். குழந்தைகளிடம் பேசும்பொழுது மறைமுகமாக எடுத்து சொல்ல வேண்டியதை மறைமுகமாகவும், நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டியதை நேரடியாகவும் சொல்ல வேண்டும் என்றார். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். வேதியியல் துறைத் தலைவர் பார்வதி நன்றி கூறினார். இதில் 1,100 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×