search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellai Collector"

    • இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழா அன்று இந்திய ஜனாதிபதியால் புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகிறது.
    • விருதிற்கான விண்ணப்பங்கள் இணைய தள முகவரியான www.padmaawards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி, கலை, வணிகம் மற்றும் தொழில், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூக நலன், பொதுநலத்துறை ஆகிய ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைப்பவர்களுக்கு பத்ம விருதுகளான "பத்ம பூஷன்", "பத்மஸ்ரீ " ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.

    இவ்விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழா அன்று இந்திய ஜனாதிபதியால் புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் வழங்கப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் இணைய தள முகவரியான www.padmaawards.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் 3 நகல்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அண்ணா விளையாட்டு அரங்கம், பாளையங்கோட்டை, நெல்லை -2 என்ற முகவரியில் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக நேரத்திலோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்கள் பெற 0462-2572632 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உரை மேல் சம்பந்தப்பட்ட விருதினை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

    தகுதியான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையுடன் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி நெல்லையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    சந்திப்பு ஆற்றுப்பாலத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 130 மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கோடகநல்லூர் கிராமத்தில் உள்ள கோவிலில் நந்தவனம் அமைக்கும் பணியில் கலெக்டர் கலந்து கொண்டார்.

    பின்னர் வீரவநல்லூருக்கு உட்பட்ட தட்டைபாறை குளத்தில் கரையில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் 1,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து அம்பையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டார். வீ.கே.புரத்தில் குருவிகளை பாதுகாக்கும் தன்னார்வலர்களுக்கு கூண்டுகளை கலெக்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சிகளில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், தாசில்தார்கள் சண்முக சுப்பிரமணியன், ஆனந்த குமார், பாலசுப்பிரமணியம், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வேய்ந்தான்குளம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சூழலியல் பூங்காவினை கலெக்டர் பார்வையிடுகிறார்.

    தொடர்ந்து நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழாவில் தமிழக அரசு அறிவித்துள்ள சுற்றுச்சூழலுக்கான விருதுக்கு தேர்வாகி உள்ள நெல்லையை சேர்ந்த 3 பேருக்கு சபாநாயகர் அப்பாவு விருது வழங்குகிறார்.

    நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசு 67 விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டாரை வழங்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    தமிழகத்தின் மின்சாரத் தேவையை குறைக்கும் பொருட்டும், சுற்றுப்புறச் சூழலைப்பேனும் வகையிலும் தமிழக அரசு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மின் மோட்டார் விவசாயிகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த சூரியசக்தி மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து விவசாயிகள் தங்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ளனர்.

    இத்திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது:-

    தமிழகத்தின் மின் தேவையில் 20 சதவீதம் விவசாயத்திற்காக செல விடப்பட்டு வருகிறது. இதுவரை 20,62,000 மின் இணைப்புகள் வேளாண்மைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

    தமிழகத்தின் மின் தேவையை குறைத்திடவும், சுற்றுச்சூழலை பேணி காத்திடவும், சோலார் சக்தியினால் இயங்கும் மோட்டர்களை அமைத்திட விவசாயிகளுக்கு 90 சதவிதம் மான்யம் அரசு வழங்கி வருகிறது. 10 குதிரை திறன் கொண்ட மோட்டார் அமைக்க ஆகும் செலவினம் ரூ.6,89,000-ல் ரூ.5,24,200-ஐ மான்யமாக வழங்கி வருகிறது.

    கடந்த 2017ம் ஆண்டில் 35 விவசாயிகளுக்கும், 2018-ம் ஆண்டு இதுவரை 32 விவசாயிகளுக்கும் சோலார் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 105 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்து பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தேவைப்படும் விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையினை அணுகி பயன் பெறலாம்.

    வேளாண்மை தொழிலை மேம்படுத்த அரசு எடுக்கும் முயற்சியினை அனைவரும் பின்பற்றி வேளாண்மை செய்து வந்தால் நாளைய தமிழகம் பசுமை செழிப்போடு விளங்கும் என்பதற்கு நெல்லை மாவட்ட விவசாயிகளே முன் உதாரணம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    நெல்லை மாவட்டத்தில் பால் பண்ணை அமைக்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக‌ அரசு பால்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சிறிய அளவிலான 100 பால் பண்ணைகள் ரூ.1.25 கோடி செலவில் தொடங்க ஆணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்திற்கு 3 சிறிய அளவிலான பால்பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி மொத்த திட்ட செலவினமாக ரூ.5 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளியின் பங்குதொகை 75 சதவிகிதம். அதாவது ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் மற்றும் மாநில அரசின் பங்குதொகை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். பால் பண்ணை தொழிலில் விருப்பமுள்ளவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

    பயனாளிகள் மாட்டுக்கொட்டகை கட்டுவதற்கு குறைந்த பட்சம் 300 சதுர அடி நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வைத்திருக்க வேண்டும். பயனாளிகள் தீவனப்புல் வளர்ப்பதற்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நீர்ப்பாசன வசதி கொண்ட நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வைத்திருக்க வேண்டும். பயனாளி ஏற்கனவே கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திலும் பயனடைந்தவராக இருத்தல் கூடாது.

    தற்சமயம் பயனாளிகள் சொந்தமாக பசு, எருமை மாடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளிகளோ அல்லது உறவினர்களோ (கணவர், தந்தை, தாய், மாமனார், மாமியார், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோர்) மத்திய மற்றும் மாநில அரசிலோ அல்லது மத்திய , மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு மையங்களிலோ பயனாளிகளாக இருக்க கூடாது அல்லது உள்ளூர் அமைப்புகளில் உறுப்பினராக இருக்க கூடாது. பயனாளி கிராம பஞ்சாயத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளிகள் ஆதிதிராவிடர், பழங்குடி இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட கலெக்ட‌ரால் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலே இறுதியானது ஆகும். தேர்வு செய்யப்படும் பயனாளிகள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் கால்நடைகளை பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 2 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்ப தாரர்கள் சம்பந்தப்பட்ட கால் நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×