search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NANO UREA"

    • உலகில் முதன் முறையாக நானோ யூரியா என்ற உரத்தை மத்திய அரசின் இப்கோ நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.
    • திருப்பூர் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் உலகில் முதன் முறையாக நானோ யூரியா என்ற உரத்தை மத்திய அரசின் இப்கோ நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நானோ யூரியாவை திருப்பூர் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல்கலைக்கழகத்தின் நானோதொழில்நுட்ப துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்ரமணியன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

    சாதாரணமாக பயன்படுத்தப்படக்கூடிய யூரியா, மண்ணில் அடி உரமாக இடும் போதோ அல்லது மேல் உரமாக இடும் போதோ அதில் உள்ள தழைச்சத்து, 30 முதல் 35 விழுக்காடு மட்டுமே பயிர்களால் பயன்படுத்தப்படுகிறது.எஞ்சிய 65 முதல் 70 சதவீதம் உயிர்ச்சத்து மண்ணில் கரைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் மீதியுள்ள உரச்சத்து ஆவியாகி, வளி மண்டலத்துடன் கலந்து வீணாகிறது. இதனால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரியாவில் உள்ள தழைச்சத்தை பயிர்கள் பயன்படுத்தும் திறன்,30 முதல் 35 சதவீதம் அளவுக்கு மேல் அதிகரிக்கப்படவில்லை.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கடந்த 12 ஆண்டுகளாக நானோ உரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவ்வகை உரங்கள் மூலம் உரத்தின் திறன் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • இருமுறை ட்ரோன் மூலம் தெளிக்க செலவு 3,700 ரூபாய் மட்டுமே.
    • நிகர லாபமாக 8,300 ரூபாய் கிடைக்கும்.

    அவிநாசி :

    வயல் விழா மூலம் நானோ யூரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சுப்ரமணியன் கூறியதாவது:-

    நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு மேல் உரமாக இடக்கூடிய சாதாரண யூரியாவுக்கு மாற்றாக நானோ யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கலாம். ஒரு பாட்டில் திரவ நானோ யூரியா (500 மி.லிட்.,)125 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு ஏக்கருக்கு சாதாரண விசை தெளிப்பான் மூலம் 20 மற்றும் 40 நாள் பயிர்களில் தெளிக்க வேண்டும்.

    ட்ரோன் மூலம் தெளிப்பதற்கு அதே அளவு திரவ நானோ யூரியாவை30 லிட்டர் தண்ணீரில் கரைத்து இரு முறையாக, வெறும்ஐந்து நிமிடங்களில் ஒரு ஏக்கர் முழுக்க தெளித்து விடலாம்.இருமுறை ட்ரோன் மூலம்தெளிக்க செலவு 3,700 ரூபாய் மட்டுமே. இதன் மூலம்கூலியாட்கள் பற்றாக்குறை முற்றிலும் தவிர்க்கப்படும்.சாதாரண யூரியா பயன்படுத்தப்பட்ட நிலங்களை காட்டிலும், நானோ யூரியா பயன்படுத்தப்பட்ட நெல் வயல்களில், 400 முதல் 500 கிலோ மகசூல், வைக்கோலில் ஆயிரம் கிலோ மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. அதன்படி, நானோ யூரியா தெளிக்கப்பட்ட நெல் வயல்களில் ஒரு எக்டருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிகர லாபமாக 8,300 ரூபாய் கிடைக்கும்.அத்துடன் மேல் உரமாக இடக்கூடிய, 50 சதவீதம் சாதாரண யூரியாவை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×