search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நானோ யூரியா பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
    X

    கோப்புபடம்

    நானோ யூரியா பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு

    • இருமுறை ட்ரோன் மூலம் தெளிக்க செலவு 3,700 ரூபாய் மட்டுமே.
    • நிகர லாபமாக 8,300 ரூபாய் கிடைக்கும்.

    அவிநாசி :

    வயல் விழா மூலம் நானோ யூரியா பயன்பாடு குறித்த விழிப்புணர்வு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பத்துறை பேராசிரியர் சுப்ரமணியன் கூறியதாவது:-

    நெல், மக்காச்சோளம் பயிர்களுக்கு மேல் உரமாக இடக்கூடிய சாதாரண யூரியாவுக்கு மாற்றாக நானோ யூரியாவை ட்ரோன் மூலம் தெளிக்கலாம். ஒரு பாட்டில் திரவ நானோ யூரியா (500 மி.லிட்.,)125 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு ஏக்கருக்கு சாதாரண விசை தெளிப்பான் மூலம் 20 மற்றும் 40 நாள் பயிர்களில் தெளிக்க வேண்டும்.

    ட்ரோன் மூலம் தெளிப்பதற்கு அதே அளவு திரவ நானோ யூரியாவை30 லிட்டர் தண்ணீரில் கரைத்து இரு முறையாக, வெறும்ஐந்து நிமிடங்களில் ஒரு ஏக்கர் முழுக்க தெளித்து விடலாம்.இருமுறை ட்ரோன் மூலம்தெளிக்க செலவு 3,700 ரூபாய் மட்டுமே. இதன் மூலம்கூலியாட்கள் பற்றாக்குறை முற்றிலும் தவிர்க்கப்படும்.சாதாரண யூரியா பயன்படுத்தப்பட்ட நிலங்களை காட்டிலும், நானோ யூரியா பயன்படுத்தப்பட்ட நெல் வயல்களில், 400 முதல் 500 கிலோ மகசூல், வைக்கோலில் ஆயிரம் கிலோ மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. அதன்படி, நானோ யூரியா தெளிக்கப்பட்ட நெல் வயல்களில் ஒரு எக்டருக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. நிகர லாபமாக 8,300 ரூபாய் கிடைக்கும்.அத்துடன் மேல் உரமாக இடக்கூடிய, 50 சதவீதம் சாதாரண யூரியாவை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×