நானோ யூரியா - விவசாயிகளிடம் பிரபலப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் மும்முரம்

உலகில் முதன் முறையாக நானோ யூரியா என்ற உரத்தை மத்திய அரசின் இப்கோ நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.திருப்பூர் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் உலகில் முதன் முறையாக நானோ யூரியா என்ற உரத்தை மத்திய அரசின் இப்கோ நிறுவனம் தயாரித்து அறிமுகப்படுத்தியிருக்கிறது.புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நானோ யூரியாவை திருப்பூர் விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகத்தின் நானோதொழில்நுட்ப துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சுப்ரமணியன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

சாதாரணமாக பயன்படுத்தப்படக்கூடிய யூரியா, மண்ணில் அடி உரமாக இடும் போதோ அல்லது மேல் உரமாக இடும் போதோ அதில் உள்ள தழைச்சத்து, 30 முதல் 35 விழுக்காடு மட்டுமே பயிர்களால் பயன்படுத்தப்படுகிறது.எஞ்சிய 65 முதல் 70 சதவீதம் உயிர்ச்சத்து மண்ணில் கரைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் மீதியுள்ள உரச்சத்து ஆவியாகி, வளி மண்டலத்துடன் கலந்து வீணாகிறது. இதனால், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக யூரியாவில் உள்ள தழைச்சத்தை பயிர்கள் பயன்படுத்தும் திறன்,30 முதல் 35 சதவீதம் அளவுக்கு மேல் அதிகரிக்கப்படவில்லை.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை கடந்த 12 ஆண்டுகளாக நானோ உரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவ்வகை உரங்கள் மூலம் உரத்தின் திறன் அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com