என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nainar Nagendran MLA"

    • அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது.
    • ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என தகவல்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.

    இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    அதன்பிறகு அண்ணாமலை அளித்த பேட்டிகள் அவர் மாற்றப்படலாம் என்றும் நீட்டிக்கப்படலாம் என்றும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது.

    அவர் மாற்றப்படலாம் என்ற கருத்து தொண்டர்களை விட தலைவர்கள் மத்தியில்தான் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மாற்றப்பட்டால் தலைவர் பதவியை பிடிப்பது எப்படி எனறு ஒவ்வொருவரும் காய் நகர்த்தத் தொடங்கினார்கள்.


    தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் இந்த போட்டியில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வழிகளில் காய் நகர்த்துகிறார்கள். எச்.ராஜா மூத்த நிர்வாகி. அவர் இதுவரை மாநில தலைவர் ஆனதில்லை. அதுமட்டு மல்ல, அண்ணாமலையை போல் அதிரடி அரசியல் பண்ணுவார் என்று டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான தமிழக பிரபலங்கள் சிலர் முயற்சிக்கிறார்கள்.

    அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ஒருவர் களம் இறங்கி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இப்படி பல தளங்களில் இருந்து பல்வேறு விதமாக தகவல்களை மேலிட தலைவர்கள் காதுகளில் போட்டாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாரை தலைவராக நியமித்தால் கட்சிக்கும் கூட்டணிக்கும் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    அதில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எனவே கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சு வார்த்தையை சுமூகமாக கொண்டு செல்வது ஆகியவை சுலபமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    அதேநேரம் கட்சி வளர்ச்சிக்கு எந்த பலனையும் தராது என்று கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.

    இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் நேற்று மாலையில் அண்ணாமலை கூறும்போது, 'நான் பிரதமர் மோடி என்ற ஒரே தலைவரை நம்பிதான் கட்சிக்கு வந்தேன். அவர் கைகாட்டும் பணி எதுவாக இருந்தாலும் செய்து முடிப்பேன். நான் முழு நேரமும் களப்பணியில் இருப்பேன்.

    மாநிலத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக நான் என் காலணிகளை கழற்றி இருக்கிறேன். எனது முழுநேரத்தையும் இன்னும் தீவிரமாக களத்தில் செலவிடுவேன்.

    மக்களை சந்திக்க நிறைய பயணம் இருக்கும். மாநில தலைவரைப் போல் எனக்கு அதிக வேலை இருக்காது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்கள் நிறுவன பணிகளை செய்யட்டும். அதனால்தான் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றேன் என்றார்.

    இதனால்தான் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது. அதனால் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த பரபரப்புக்கு இடையில் அண்ணாமலை சிருங்கேரி சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் கூறுகிறார்கள்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரூ.7 லட்சம் மதிப்பில் 1,000 பேருக்கு புத்தாடைகள், தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கி பேசினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில், கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை தூத்துக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    1,000 பேருக்கு உதவிகள்

    மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் ஜெ.வி.அசோகன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.7 லட்சம் மதிப்பில் 1,000 பேருக்கு புத்தாடைகள், தையல் எந்திரம் ஆகியவற்றை வழங்கி பேசினர்.

    எல்லா மதமும்

    ஒன்றுதான்

    விழாவில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசும்போது, ''பா.ஜனதா எல்லா மதத்துக்குமான கட்சி. மதங்கள் வேறுபட்டாலும் மனம் ஒன்றுதான். மனதளவில் ஒன்றாக இறைவனை பார்க்க வேண்டும். பிரதமர் மோடி அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    எங்களுக்கு எல்லா மதமும் ஒன்றுதான். சாதி, மத பேதம் இன்றி இந்தியர் என்பதில் நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள்தான்'' என்று கூறினார்.

    தேர்தல் வாக்குறுதி

    விழாவில் சசிகலாபுஷ்பா பேசும்போது, ''பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பொய் சொல்வதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால் தி.மு.க.வினர்தான் பொய்களை கூறிக் கொண்டு இருக்கின்றனர்.

    தலைவர் அண்ணாமலை சொந்தமாக உழைத்து, மெரிட்டில் ஐ.பி.எஸ். ஆகி வந்தவர். அதனை அவர் கூறுவதில் தவறு இல்லை. தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பொய்களை கூறி வரு–கிறது.

    எங்கள் தலைவரை பற்றி அவதூறாக பேசக்கூடாது. சத்துணவில் மாணவர்களுக்கு நல்ல தரமான முட்டைகளை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் தரமான சாலை அமைக்கப்படவில்லை. கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தி.மு.கவினர் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களால் 40 தொகுதிகளிலும் ஜெயிக்க முடியாது'' என்று கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    விழாவில் பா.ஜ.க. மாநில சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் சதீஷ்ராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி பாண்டியன், தலைவர் சுரேஷ்குமார், மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன், ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் விவேகம் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலை–வர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாவட்ட துணைத்தலைவர் வக்கீல் எஸ்.பி.வாரியார் தொகுத்து வழங்கினார்.

    ×