search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Music Academy"

    • ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார்
    • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது

    பெரியாரை போற்றும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "90 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் மியூசிக் அகாடமி அமைப்பின் புனிதத்திற்கு பிரிவினை சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    சென்னை மியூசிக் அகாடமியின் அதிகார போக்கிற்கு எதிராக குரல் எழுப்பிய அனைத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் தமிழ்நாடு பாஜக துணை நிற்கிறது.

    ரஞ்சனி, காயத்ரி, திருச்சூர் பிரதர்ஸ், ரவிகிரண், ஹரிகதா, துஷ்யந்த் ஸ்ரீதர்,விசாகா ஹரி, மற்றும் பலர் பழமையான மியூசிக் அகாடமியின் புனிதத்தை பாதுகாக்க பாடுபடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.

    டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் பதிவில், "மியூசிக் அகாடமியின் மாநாடு 2024-ல் பங்கேற்பதில் இருந்தும், டிசம்பர் 25-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த கச்சேரியை வழங்குவதிலிருந்தும் விலகுகிறோம்.

    இந்த மாநாடு டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். அவர் கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மிகவும் மரியாதைக்குரிய நபர்களை அவமதித்துள்ளார். அவரது செயல்கள் கர்நாடக இசைக்கலைஞராக இருப்பதே அவமானம் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் உள்ளது. மேலும் அவர் ஆன்மீகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார்.

    பல ஆண்டுகளாக கர்நாடக இசையை தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பை கொச்சைப்படுத்தும் வகையில் அவரது செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

    பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்.

    கலை மற்றும் கலைஞர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றை புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாங்கள் கொண்ட நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாகும்" என தெரிவித்துள்ளனர்.

    ரஞ்சனி, காயத்ரியின் இந்த முடிவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல்.
    • ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக மியூசிக் அகாடமி செயல்படுகிறது.

    சென்னை:

    சென்னை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமியின் 96வது ஆண்டு விழா கருத்தரங்கம், கச்சேரியை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

    மியூசிக் அகாடமி இசைக்கலை ஒன்றியத்தின் 96வது ஆண்டு ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைக்கிறேன். இங்கு திரு. முரளி அவர்கள் குறிப்பிட்டது போல 1975ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும், 1996ம் ஆண்டு நடந்த ஆண்டு விழாவிலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியிருக்கிறார்.

    அந்த வகையில் இந்த 96வது ஆண்டு விழாவில் நான் பங்கெடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். 1927ம் ஆண்டு நடந்த இசை மாநாட்டில் இந்திய இசையை வலுசேர்ப்பதற்காக இப்படி ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நினைத்து உருவாக்கியிருக்கிறார்கள். எந்த அமைப்பாக இருந்தாலும் அதனை உருவாக்குவது எளிது. ஆனால் தொடர்ந்து நடத்துவதுதான் சிரமம். 96 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தியிருக்கும் அனைவரையும் வணங்குகிறேன், வாழ்த்துகிறேன்.

    இன்னும் 4 ஆண்டுகளில் இந்நிகழ்ச்சி என்பது நூற்றாண்டு விழாவாக நடைபெற போகிறது. அதிலும் நான் உறுதியாக கலந்துகொள்வேன் என்று நம்புகிறேன்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதம் இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள இசை கலைஞர்களை வரவழைக்க கூடிய வேடந்தாங்கலாக இந்த மியூசிக் அகாடமி இன்றைக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இசை வளர்த்தல் என்பது கலை வளர்த்தல், கலை வளர்த்தல் என்பது பண்பாட்டை வளர்த்தல், பண்பாட்டை வளர்த்தல் என்பது நமது நாகரீகத்தை வளர்த்தல் அந்த வகையில் மக்கள் மனதையும், இந்த மாநிலத்தையும் பண்படுத்தும் கடமையை இது போன்ற இசை கலை மன்றங்கள் செய்து வருவது மிகப்பெரிய தொண்டு.

    மியூசிக் அகாடமி போன்ற இசைக் கலை அமைப்புகளை ஏதோ பொழுதுபோக்கு அமைப்பு என்று சொல்லமுடியாது. இவை அனைத்து நமது பண்பாட்டை வளர்க்க கூடியவை. இந்த நிகழ்ச்சியில் விருதுகளை பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகின் மிகப்பெரிய விருது மியூசிக் அகாடமி விருது என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக அறிந்ததே. அத்தகைய உரிய விருது பெற்றுள்ள நீங்கள் அனைவரும் தொடர்ந்து இத்துறைக்கு தொண்டாற்றி உங்களை போன்ற திறமைசாலிகளை உருவாக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

    ×