என் மலர்
நீங்கள் தேடியது "mumbai railway station"
- சமீபத்தில் கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
- கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் கூலி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அவ்விழாவில் கூலி படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் மும்பையில் உள்ளூர் ரெயில் நிலையங்களில் உள்ள மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில்களில் கூலி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
- ஸ்ரேயாசிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோவில் இளம்பெண் ஆடுவதை மற்ற பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இது தேவையற்றது என்ற கருத்தை பதிவிட்டனர்.
ரெயில் நிலையங்களில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் எவ்வளவுதான் அறிவுரை கூறினாலும் சிலர் கேட்பதில்லை. இந்நிலையில் மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரீமிக்ஸ் பாடல் ஒன்றுக்கு இளம்பெண் நடமாடுகிறார். ஸ்ரேயாசிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோவில் இளம்பெண் ஆடுவதை மற்ற பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ பல்வேறு கருத்துக்களையும் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பொது இடத்தில் இது தேவையற்றது என்ற கருத்தை பதிவிட்டனர். சிலர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் சிலர் அந்த பெண்ணின் நடன திறமை மற்றும் தைரியத்தை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது.
நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் வதோதரா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் சுமார் 2000 பயணிகள் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து மேற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்த ரெயில் நிலையங்களுக்கு கடற்படை வீரர்கள் இன்று காலையில் விரைந்தனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் கடந்து செல்லக்கூடிய மிக உயரமான வாகனங்களில் வந்த அவர்கள், பயணிகளை மீட்கும் பணியை தொடங்கி உள்ளனர். #MumbaiRains #MHRains






