search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cop suspended"

    • சம்பவத்தன்று இரவு புஷ்பேந்திரா அனுமன்கஞ்ச் பகுதி வழியாக சென்ற போது, சாலையில் நடந்து சென்ற தனது தோழியை கண்டுள்ளார்.
    • தோழி குடிபோதையில் இருந்ததாகவும், அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாகவும் போலீஸ்காரர் கூறினார்.

    போபால்:

    மத்தியபிரதேச தலைநகர் போபால் பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா. போலீஸ்காரரான இவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்ணை கையை பிடித்து இழுப்பது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கூடுதல் துணைபோலீஸ் கமிஷனர் ராம் சினேகி மிஸ்ரா கூறுகையில், வீடியோவில் உள்ள பெண் போலீஸ்காரர் புஷ்பேந்திராவின் தோழி ஆவார்.

    சம்பவத்தன்று இரவு புஷ்பேந்திரா அனுமன்கஞ்ச் பகுதி வழியாக சென்ற போது, சாலையில் நடந்து சென்ற தனது தோழியை கண்டுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும், அவரால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாகவும் போலீஸ்காரர் கூறினார்.

    எனவே அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக அந்த பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிட முன்வந்ததாகவும் அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளாததால் அவரை பிடித்து மோட்டார் சைக்கிளில் உட்கார சொன்னதாகவும் அந்த போலீஸ்காரர் கூறினார்.

    எனினும் சம்பவம் நடந்த போது அவர் போலீஸ் சீருடையில் இருந்ததால் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.

    இதற்கிடையே மத்தியபிரதேச போலீசார் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரரும், வீடியோவில் உள்ள அந்த பெண்ணும் நண்பர்கள் ஆவர். சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க விரும்பவில்லை என அந்த பெண் எழுத்து பூர்வமாக அறிக்கை அளித்துள்ளார். எனினும் முதல்கட்டமாக போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைரீதியாக விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் குடி போதையில் வாகனம் ஓட்டிய போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்டு செய்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டு உள்ளார்.
    கோவை:

    கோவை செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் வினோத் (35). இவர் கடந்த வாரம் செல்வபுரம் பகுதியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.

    அவர் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஒட்டி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை வழி மறித்து நிறுத்தி உள்ளனர்.

    அவர் குடி போதையில் இருப்பதை அறிந்த பொதுமக்கள் போலீஸ்காரராகிய நீங்கள் குடி போதையில் சீருடையில் மோட்டார் கைக்கிளை ஓட்டி செல்கிறீர்களே? என கேட்டு உள்ளனர்.

    அதற்கு போலீஸ்காரர் வினோத் பதில் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். சற்று நேரத்தில் அங்கிருந்து அவர் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

    குடிபோதையில் போலீஸ்காரர் சீருடையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்ற வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது. இந்த தகவல் உயர் அதிகாரிகள் மூலம் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா கவனத்துக்கும் சென்றது.

    அவர் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது போலீஸ்காரர் வினோத் ஏற்கனவே குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதும் தெரிய வந்தது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    போலீஸ்காரர் வினோத்தை சஸ்பெண்டு செய்து கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவிட்டு உள்ளார். #Tamilnews
    மும்பையில் ரெயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் ரெயில்வே காவலர் தகாதமுறையில் நடந்து கொண்ட வீடியோ வெளியானதால் அவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    மும்பை:

    மும்பை கல்யான் ரெயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு பகுதியில் இன்று ஒரு பெண் தன்னுடன் வந்தவருடன் அமர்ந்திருந்தபோது, அருகாமையில் அமர்ந்திருந்த ரெயில்வே காவலர் ஒருவர் அந்தப் பெண்ணின் தோள்பட்டையில் கை வைப்பதை பார்த்த சிலர் இந்த அத்துமீறலை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

    இதைகண்ட மத்திய ரெயில்வே வட்டார கமிஷனர் அந்த காவலரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அந்த காவலர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்படுமா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த  மத்திய ரெயில்வே வட்டார கமிஷனர் சச்சின் பலோடே, இந்த சம்பவம் தொடர்பாக, அந்த காவலர் மீது புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. எனினும், அந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.
    ×