என் மலர்
நீங்கள் தேடியது "Moolakaraipatti"
- சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பேய்குளம், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு, இட்டேரி, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லைக்கு வந்தடைகிறது.
- திசையன்விளையில் இருந்து காரியாண்டி வழியாக மூலக்கரைப்பட்டிக்கு காலை 7.10 மணிக்கு வந்தடையும் மற்றொரு அரசு பஸ் பருத்திப்பாடு, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தடைகிறது.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பேய்குளம், மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, பருத்திப்பாடு, இட்டேரி, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லைக்கு வந்தடைகிறது.
பயணிகள் அவதி
இதேபோல் திசையன்விளையில் இருந்து காரியாண்டி வழியாக மூலக்கரைப்பட்டிக்கு காலை 7.10 மணிக்கு வந்தடையும் மற்றொரு அரசு பஸ் பருத்திப்பாடு, ரெட்டியார்பட்டி வழியாக நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தடைகிறது. இதற்கு அடுத்ததாக அதே வழித்தடத்தில் 7.20 மணிக்கு டவுன் பஸ் நெல்லைக்கு வருகிறது.
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தனியார் பஸ் இதே வழித்தடத்தில் இயங்குகிறது. இந்த பஸ்கள் மூலமாக நெல்லைக்கு பள்ளி, கல்லூரிக்கு படிக்க செல்லும் மாணவ-மாணவிகள், மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் கொண்டு வரும் வியாபாரிகள், தனியார் நிறு வனங்களுக்கு பணி களுக்கு செல்பவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயன் அடைந்த வருகின்றனர்.
அடிக்கடி மாயம்
இந்நிலையில் சாத்தான் குளத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.50 மணிக்கு மூலக்கரைப்பட்டிக்கு வரும் அரசு பஸ் கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர் என்று பயணிகள் புகார் கூறி வருகின்றனர்.
அதேபோல் திசையன் விளை வழியாக 7.10 மணிக்கு வரும் பஸ்சும் அவ்வப் போது மாயமாகி விடுவதாகவும், அதன்பின்னர் மூலக்கரைப்பட்டிக்கு காலை 7.20-க்கு வந்து சேரும் டவுன்பஸ்சில் ஏறி வந்தால் நெல்லைக்கு வந்து சேர நேரம் அதிக மாவதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
எனவே காலை 6.50 மணி மற்றும் 7.10 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ் களை தவ றாமல் தி ன மும் இயக்க நடவடிக்கை எடுத்து பயணிகளின் சிரமத்தை போக்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் கழுவூர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். தொழிலாளி.
- சம்பவத்தன்றும் மது போதையில் வந்த தமிழ்செல்வனை, சாந்தி கண்டித்ததால் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் கழுவூர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். தொழிலாளி. இவருக்கும், இட்டமொழி அம்பேத்கர் காலனியை சேர்ந்த சாந்திக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தமிழ் செல்வன் அடிக்கடி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்ததால் அவர்களுக்கிடைேய அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் மது போதையில் வந்த தமிழ்செல்வனை, சாந்தி கண்டித்ததால் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சாந்தி கோபித்து கொண்டு இட்டமொழியில் உள்ள தனது தயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த தமிழ்செல்வன் வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தமிழ்செல்வனின் தந்தை மாணிக்கம் விஜய நாராயணம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.