என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mineral"

    • உக்ரைனில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க அமெரிக்கா ஒப்பந்தம்.
    • இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படையெடுத்தது. முதலில் உக்ரைன் பின்வாங்கிய நிலையில் ரஷியா ஏராளமான பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் பதிலடி கொடுத்து பல பகுதிகளை மீட்டது. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக இரு நாடுகளுக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா உக்ரைன் மற்றும் ரஷியா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை எடுத்துக் கொள்ள உக்ரைனுடன் ஒப்பந்தும் போட்டுக்கொள்ள டிரம்ப் விரும்பினார். முதலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உக்ரைன் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஒருமனதாக ஒப்பந்தத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. வாக்கெடுப்பு வெற்றிபெற 226 வாக்குகள் தேவை என்ற நிலையில், 338 வாக்குகள் ஆதரவாக விழுந்தன. எந்தவொரு உறுப்பினரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை அல்லது புறக்கணிக்கவில்லை என உக்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • கூடுதலாக எடுத்து செல்லப்படும் 15 டன் வரையிலான கனிம வளங்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சாலையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.
    • பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாகனத்தை மீண்டும் சாலையில் பயணிக்க அனுப்புவது சட்டத்தை மீறிய செயலாகும்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கீழக்கடையத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாசிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அபராதம் விதிப்பு

    கேரளா மாநிலத்திற்கு நாள்தோறும் ஏராளமான கனரக லாரிகளில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இவை 25 டன் எடை வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 40 முதல் 45 டன் வரை எடுத்து செல்கிறார்கள்.

    வாகன சோதனையி ன்போது ஒவ்வொரு வாகனத்திற்கும் ரூ.20 ஆயிரம் அபராதமும், கூடுதலாக ஏற்றி செல்லும் ஒவ்வொரு டன்னிற்கும் ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

    நடவடிக்கை தேவை

    இது வரவேற்கத்தக்கது என்றாலும், புதிய மோட்டார் வாகன விதிகளின்படி தற்போது அபராதம் விதிக்காமல் இருப்பது அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. அதாவது அபராதம் ரூ.45 ஆயிரம் வரை விதித்தாலும், கூடுதலாக எடுத்து செல்லப்படும் 15 டன் வரையிலான கனிம வளங்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் சாலையில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

    ஆனால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வாகனத்தை மீண்டும் சாலையில் பயணிக்க அனுப்புவது சட்டத்தை மீறிய செயலாகும். எனவே பாஸ் இல்லாமல் அதிகப்படியான கனிமங்களை அனுப்பும் குவாரி உரிமையாளர்கள் மீது எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×