search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant money seized"

    வண்ணாரப்பேட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மலேசியா சென்று வந்த வியாபாரியிடம் ரூ.87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் பாலு (65) மளிகை கடை  உரிமையாளர். சில தினங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் சென்ற பாலு இன்று சென்னை திரும்பினார். அதிகாலையில் விமான நிலையத்தில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். பாலு சென்ற காரை பறக்கும்படை அதிகாரி தமிழரசன் சோதனை செய்தார்.

    இதில், வியாபாரி பாலுவிடம் ரூ.87 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. அது மலேசியா சுற்றுப் பயணம் செய்து விட்டு வந்த பிறகு மீதம் உள்ள பணம் என்று பாலு கூறினார். என்றாலும், தகுந்த ஆவணம் இல்லாமல் பணம் வைத்திருந்ததாக கூறி, 87 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019

    வாடிப்பட்டி அருகே எலுமிச்சை வியாபாரியிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    வாடிப்பட்டி:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையொட்டி நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்பவர்கள் அதற்கு உரிய ஆவணங்களை கொண்டு வராவிட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அறிவிப்பை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாசில்தார் மலர்விழி தலைமையில் இன்று அதிகாலை அதிரடி சோதனையில் இறங்கினர். வாடிப்பட்டி சந்தை பாலம் அருகே கோவையில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அந்த பஸ்சில் பயணம் செய்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகைதீன்அப்பாஸ் (வயது39) ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 450 வைத்திருந்தார். அதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்தனர்.

    எலுமிச்சை வியாபாரியான நான் கோவையில் பணம் வசூல் செய்து வருகிறேன் என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் அதிகாரிகள் அவர் கூறியதை ஏற்கவில்லை. உரிய ஆவணங்களை ஒப்படைத்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

    ×