search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Membership Enrollment"

    • கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.
    • இளைஞர்களை அதிகம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

    ருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் தெற்கு தொகுதி, தெற்கு மாநகரத்துக்கு உட்பட்ட 21 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    வீடு, வீடாக சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி கூறி புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும். இளைஞர்களை அதிகம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர்கள் சேகர், நந்தினி, பகுதி செயலாளர்கள் நாகராஜ், உசேன், மேங்கோ பழனிசாமி, கவுன்சிலர் செந்தூர் முத்து, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட செயலாளர்கள், மாநகர, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. சார்பில் வழங்கினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஏரி கோடி பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி தலைமை வகித்தார். அனைவரையும் டிவி.சிவன் வரவேற்றார்.

    ஒன்றிய பொறுப்பா ளர்கள் கருணாகரன், நாகராஜ், முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே. ஜி.ரமேஷ், டிடிசி சங்கர், நாகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் டாக்டர் திருப்பதி, யுவராஜ், மாவட்ட பிரதி பழனி உட்பட மாவட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் போலீசாருடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தென் பாரத அமைப்பு செயலாளர் ஸ்ரீ கேசவராஜ் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி பகுதியைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை நடத்த முற்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார், எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் அவர்களுடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போலீசார் ஸ்ரீ கேசவராஜ் உட்பட விஸ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர்கள் சேர்த்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பிச்சனூர் பாரதியார் தெருவில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே. ராஜமார்த்தாண்டன் தலைமை தாங்கினார். குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ், பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் கே.ஜனார்தனன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர இளைஞரணி அமைப்பாளர் ஏ.என். விஜயகுமார் வரவேற்றார்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எம்.பாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் கலந்து கொண்டு இல்லம் தேடி திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவர் த.புவியரசி, தலைமைக் கழக பேச்சாளர் குடியாத்தம் குமரன், நகர மன்ற உறுப்பினர்கள் ஜி எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், சி. என்.பாபு, எம்.எஸ்.குகன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×