search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்கு
    X

    தென்காசியில் விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்கு

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
    • எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் போலீசாருடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தென் பாரத அமைப்பு செயலாளர் ஸ்ரீ கேசவராஜ் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி பகுதியைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை நடத்த முற்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார், எவ்வித அனுமதியும் பெறாமல் கோவில் முன்பு உறுப்பினர் சேர்க்கை நடத்தியதால் அவர்களுடன் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போலீசார் ஸ்ரீ கேசவராஜ் உட்பட விஸ்வ ஹிந்து பரிசத் நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×