search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் -  செல்வராஜ் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    செல்வராஜ் எம்.எல்.ஏ

    திருப்பூர் மாநகரில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் - செல்வராஜ் எம்.எல்.ஏ. பேச்சு

    • கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.
    • இளைஞர்களை அதிகம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

    ருப்பூர்:

    தி.மு.க., திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் தெற்கு தொகுதி, தெற்கு மாநகரத்துக்கு உட்பட்ட 21 வார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.

    வீடு, வீடாக சென்று தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி கூறி புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும். இளைஞர்களை அதிகம் சேர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் தெற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் நடராஜன், துணை செயலாளர்கள் சேகர், நந்தினி, பகுதி செயலாளர்கள் நாகராஜ், உசேன், மேங்கோ பழனிசாமி, கவுன்சிலர் செந்தூர் முத்து, மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்ட செயலாளர்கள், மாநகர, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×