search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mega vaccination"

    • முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    • 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்குஇலவ சமாக அரசு மருத்துவ மனைகள் ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை 1700 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்படுகிறது.

    இதில் முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    தற்போது 15.7.22 முதல் தொடங்கி 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு மருத்துவ மனைகள் ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த மெகா முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் பணிபுரிய உள்ளனர்.

    எனவே இந்த முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாகதடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும், முதல் தவணை போட்டுக்கொண்டு நாட்கள் கடந்தவர்கள் இரண்டாம் தவணையும், இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் குறிப்பிட்டகால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளஅறிவுறுத்தப்படுகின்றனர்.

    • இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    ×