search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "match box"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
    • ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைக்கு முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

     

    அதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகி கிடைக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும், சில விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை எனக்கூறி பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    அதேபோன்று, ம.தி.மு.க.வுக்கு குறைந்தது 2 தொகுதியிலாவது போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் எனக்கூறி பம்பரம் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது.

    இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியது.

    • ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது.
    • பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க மறுப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார்.

    இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது.

    ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, புதிய சின்னம் குறித்த நாளை தெரிவிக்கப்படும் என துரை வைகோ தெரிவித்தார்

    இந்நிலையில், பம்பரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், மதிமுக மாற்று சின்னம் கோரியுள்ளது.

    அதன்படி, மதிமுக கட்சிக்கு தீப்பெட்டி அல்லது எரிவாயு சிலிண்டர் சின்னம் வேண்டும் என கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    ×