search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாராளுமன்ற தேர்தல்: ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
    • ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைக்கு முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.

    தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

    அதேவேளையில், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. போன்ற கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் பா.ஜ.க.வின் தலையீடு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகி கிடைக்காததால் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும், சில விதிமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை எனக்கூறி பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    அதேபோன்று, ம.தி.மு.க.வுக்கு குறைந்தது 2 தொகுதியிலாவது போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் எனக்கூறி பம்பரம் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்தது.

    இந்நிலையில், ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் மறுக்கப்பட்டதால் தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியது.

    Next Story
    ×