search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage ban"

    • பகல் 1 மணி அளவில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது.
    • இளைஞர்கள் ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டனர்

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் கொருமடு என்ற இடத்தில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது.

    இங்கு 27-வது ஆண்டு விழா மற்றும் திருமண தடை நீக்கும் சுயம்வர பார்வதி யாகம் நடை பெற்றது. காலை 8 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் யாகம் தொடங்கியது. பகல் 1 மணி அளவில் பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் நடந்தது. காரைக்குடியை சேர்ந்த ஆர்.முரளி தரன் சாந்தி தம்பதிகள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவில் முன்பாக அமைக்கப்பட்டு இருந்து பிர–மாண்ட பந்தலில் சுயம்வர பார்வதி யாகம் நடந்தது. திருமணம் ஆகாத இளம்பெண்கள், இளைஞர்கள் ஏராளமானோர் யாகத்தில் கலந்து கொண்டனர். வேதவிற்பனர்கள் சொல்வதை அவர்கள் திரும்ப கூறி வழிபட்டனர்.

    இதில் ஈரோடு மட்டு மின்றி கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர். அனைவருக்கும் காலை மற்றும் மதியம் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இந்த யாகத்தில் கலந்து கொள்பவர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் கோபிசெட்டி பாளையத்தில் இருந்து சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ராமநாதபுரம் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் திருமண தடை, கால சர்ப்ப தோஷத்திற்கு பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் முக்கியமான 2 பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

    ஒன்று காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி, மற்றொன்று திருமணம் கைகூட பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டி தோஷ நிவர்த்தியடைகின்றனர். திருமணம் கைகூட வேண்டுபவர்கள், இரண்டு மாலைகளுடன் திருக்கோவிலுக்கு வர வேண்டும்.

    அந்த மாலைகள் பெருமாள் மற்றும் தாயாரிடம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து ஒரு மாலையைத் திருப்பித் தரப்படும். அதை பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும். இந்த பிரார்த் தனையை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் மேற்கொள்ள வேண்டும். முடிவில் ஆனந்தமான செய்தி உங்களை வந்தடையும்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சாயல்குடி இடையில் கடலாடி அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    நெட்டப்பாக்கம் அருகே திருமணம் தடைபட்டதால் வேதனை அடைந்த வாலிபர் காதலி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் விஜயராஜ் (வயது24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விஜயராஜ் சிறுவயதில் இருந்த போது அவரது பெற்றோர் பிரிந்து சென்று விட்டதால் விஜயராஜ் தனது தாய் மாமன் கங்காதுரை பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே விஜயராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளிபருவத்தில் இருந்தே காதலித்து வந்தார். அந்த பெண்ணின் பெற்றோரும் தனது மகளை விஜயராஜிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால் சில காரணங்களுக்காக திருமணம் தடைபட்டு கொண்டே சென்றது.

    இதனால் விஜயராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இவர் நேற்று காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் காதலியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

    சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது அங்கு விஜயராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து விஜயராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விஜயராஜின் தாய் மாமன் கங்காதுரை கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×