என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமணம் தடைபட்டதால் காதலி வீட்டில் வாலிபர் தூக்கில் தொங்கினார்
சேதராப்பட்டு:
நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம் புதுகாலனியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் விஜயராஜ் (வயது24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விஜயராஜ் சிறுவயதில் இருந்த போது அவரது பெற்றோர் பிரிந்து சென்று விட்டதால் விஜயராஜ் தனது தாய் மாமன் கங்காதுரை பராமரிப்பில் இருந்து வந்தார்.
இதற்கிடையே விஜயராஜ் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பள்ளிபருவத்தில் இருந்தே காதலித்து வந்தார். அந்த பெண்ணின் பெற்றோரும் தனது மகளை விஜயராஜிக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்தனர். ஆனால் சில காரணங்களுக்காக திருமணம் தடைபட்டு கொண்டே சென்றது.
இதனால் விஜயராஜ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த இவர் நேற்று காதலி வீட்டுக்கு சென்றார். அங்கு யாரும் இல்லாத நேரத்தில் காதலியின் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணின் பெற்றோர் வீட்டுக்கு வந்த போது அங்கு விஜயராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து விஜயராஜை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஜயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து விஜயராஜின் தாய் மாமன் கங்காதுரை கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்