search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "male dead body"

    சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணையாற்றில் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆற்றில் பிணமாக மிதந்தவர் கடலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு ஊர் திரும்பும்போது குடிபோதையில் ஆற்றில் தவறி விழுந்து இறந்திருக்காலம் என போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து அந்த நபர் யார்? எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அரக்கோணம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    ஓச்சேரி அருகே உள்ள எரும்புலி பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் பின்புறம் வேஷ்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

    இதனை கண்ட பொதுமக்கள் அவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்தவருக்கு 45 வயது இருக்கும் எனவும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா ? என்பது குறித்தும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர் அருகே கால்வாயில் மிதந்து வந்த ஆண் பிணத்தை மீட்ட போலீசார் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலூர்:

    மேலூர் பகுதியில் பெரியார் பாசன கால்வாய் பல்வேறு ஊர்களுக்கும் செல்கிறது. குறிச்சிபட்டி செல்லும் கால்வாயில் இன்று காலை ஆண் பிணம் மிதந்துள்ளது.

    இதனை கண்டவர்கள் கீழவளவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா, ஏட்டு பரசுராமன் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து தனியாமங்கலம் அருகே அந்த உடல் மீட்கப்பட்டது.

    மீட்கப்பட்ட ஆண் 30 வயது மதிக்கத்தக்கவர். அவரது உடலில் காயங்கள் காணப்படுகின்றன. எனவே அவரை யாராவது அடித்துக் கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கலாமா? அல்லது ஆற்றுக்குள் தவறி விழுந்து அவர் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    ×