search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhavaram bus Stand"

    சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் மருத்துவ மாணவி கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாதவரம்:

    ஆந்திரா மாநிலம் நெல்லூர் வெங்கடகிரி நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகள் கீதா மாதுரி (வயது20).

    சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி கீதாமாதுரி மாதவரம் நவீன பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் கையை அறுத்த நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் கீதா மாதுரி பிளேடால் கையை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுபற்றி அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “கீதாமாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதித்தது. இதனால் அவரை கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தோம். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்” என்று தெரிவித்தனர்.

    இதனால் மாணவி நெல்லூரில் பஸ்சில் சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்ததும் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    மாதவரம் அடுக்குமாடி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    மாதவரம்:

    மாதவரம் ரவுண்டானா அருகே நவீன அடுக்குமாடி பஸ் நிலையம் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இங்கிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, நெல்லூர், விஜயவாடா, தெலுங்கானா போன்ற இடங்களுக்கும் மற்றும் புறநகர் பகுதிக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன

    இங்கு தினமும் ஏராளமான பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.

    பஸ்நிலையம் உள்ளே அமைக்கப்பட்டிருக்கின்ற கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவசர தேவைக்கான குழந்தைகளுக்கு பிஸ்கட், பால் மற்றும் மருத்துவ வசதிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லை.

    பால், மருந்து, மாத்திரை வாங்க வேண்டும் என்றாலும் கூட ரோட்டை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்பாக ஏ.டி.எம். வசதி இல்லை.

    இதனால் பெரும்பாலும் மக்கள் பணம் எடுக்கவும் அவசர தேவைக்கு பொருட்களை வாங்கவும் ரோட்டை கடந்து செல்கிறார்கள்.

    எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்பட்ட சிறப்பு முன்பதிவு மையங்களில் 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் இன்று முதல் 5-ந்தேதிவரை இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு திரும்பி வர வசதியாக நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்வதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது. இது தவிர தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் 2, மாதவரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் தலா 1 என்ற அளவில் மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டன.

    சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    முன்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணச் சீட்டுகளை விரைந்து வழங்கும் வகையில் ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Diwali #SpecialBuses
    கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Diwali #SpecialBus
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவும், 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து தினசரி செல்லக்கூடிய 2,275 பஸ்களுடன் 4,542 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,367 பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் வெளியூர்களில் இருந்து 3 நாட்களுக்கு 9,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி முடிந்த பிறகு முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்ப 4 நாட்களுக்கு 7,635 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும். கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் 26 முன்பதிவு சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் சானடோரியம் பஸ்நிலையத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர், பூந்தமல்லியில் 1 கவுண்டர், மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் 1 கவுண்டர் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. #Diwali #SpecialBus
    ×