search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KK Nagar bus stand"

    புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்கப்படுகிறது. #KKNagarBusdepot
    சென்னை:

    சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து தினமும் 2500 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. இதனால் கோயம்பேடு 100 அடி சாலை, மதுரவாயல் சாலை எப்போதும் நெரிசலுடன் காணப்படுகிறது.

    பொதுமக்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்வதற்குள் பெரும்பாடாகி விடுகிறது. பண்டிகை காலங்களில் வாகன பெருக்கத்தால் மேலும் நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.

    கோயம்பேடு பஸ் நிலைய பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து துறையும் போலீசாரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக ஆந்திர மார்க்கம் செல்லும் அனைத்து பஸ்களும் மாதவரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறநகர் பஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தீபாவளி பண்டிகை காலத்தில் இருந்து 400 பஸ்கள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சற்று நெரிசல் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்குவதற்கு பதிலாக கே.கே.நகர் மாநகர பஸ் டெப்போவில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டது.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்க 167 விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்களும் புதுச்சேரி போக்குவரத்து கழக 20 பஸ்களும் என மொத்தம் 187 அரசு பஸ்கள் கே.கே.நகரில் இருந்து கடந்த 2 வாரமாக இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் பயண நேரம் 30 நிமிடங்கள் குறைந்துள்ளன. மேலும் ‘பீக் அவர்ஸ்’ நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து அசோக் நகர் வரையிலான 6 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது.


    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில் கிழக்கு கடற்கரை வழியாக கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் செல்லக்கூடிய பஸ்கள் கே.கே.நகரில் இருந்து இயக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பஸ்கள் செல்கின்றன.

    பயணிகள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு அதிகம் ஏற்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே இதனை வரவேற்கவில்லை. பெரும்பாலான பயணிகள் நெரிசல் இல்லாமல் விரைவாக செல்வதற்கு இந்த மாற்றம் செய்யப்பட்டது நல்லது என்று தெரிவிக்கின்றனர்.

    மேலும் கே.கே. நகர் பஸ் நிலையத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து மாநகர பஸ் வசதி அதிகம் இருப்பதால் பயணிகள் எளிதாக சென்று பயணிக்க முடியும் என்றனர். #KKNagarBusdepot
    தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்பட்ட சிறப்பு முன்பதிவு மையங்களில் 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். #Diwali #SpecialBuses
    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, பொது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழகம் முழுவதும் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த பஸ்கள் இன்று முதல் 5-ந்தேதிவரை இயக்கப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நகரங்களில் இருந்து 9,200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை உள்பட பல ஊர்களுக்கு திரும்பி வர வசதியாக நவம்பர் 7, 8, 9 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்வதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் செயல்படுகிறது. இது தவிர தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் 2, மாதவரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் தலா 1 என்ற அளவில் மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டன.

    சிறப்பு முன்பதிவு மையம் திறக்கப்பட்ட 2 நாட்களில் மட்டும் 7187 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்றும் ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    முன்பதிவு செய்ய வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணச் சீட்டுகளை விரைந்து வழங்கும் வகையில் ஊழியர்கள் போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  #Diwali #SpecialBuses
    கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. #Diwali #SpecialBus
    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம், மாதவரம் புதிய பஸ்நிலையம், பூந்தமல்லி பஸ்நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லவும், 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னையில் இருந்து தினசரி செல்லக்கூடிய 2,275 பஸ்களுடன் 4,542 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கு மொத்தம் 11,367 பஸ்கள் இயக்கப்படும். அதேபோல் வெளியூர்களில் இருந்து 3 நாட்களுக்கு 9,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


    தீபாவளி முடிந்த பிறகு முக்கிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு திரும்ப 4 நாட்களுக்கு 7,635 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும். கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் 26 முன்பதிவு சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம் சானடோரியம் பஸ்நிலையத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்டர், பூந்தமல்லியில் 1 கவுண்டர், மாதவரம் புதிய பஸ்நிலையத்தில் 1 கவுண்டர் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. #Diwali #SpecialBus
    ×