search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "madhapur"

    • சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.
    • தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் சமூக விரோதிகள் சிலர் கையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிகின்றனர்.

    அவர்கள் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. மேலும் தகாத வார்த்தைகள் பேசி பெண்கள் நடக்க முடியாத நிலை நிலவுகிறது. முக்கிய பகுதிகளில் அவர்கள் திரிவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுகிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 15வது நிதிக்குழு மானிய நிதியில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி, சுற்றுச்சுவர் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை
    • ஒன்றிய கவுன்சிலர் லோகு பிரசாத்,ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் ஊராட்சி பகுதியில் 15வது நிதிக்குழு மானிய நிதியில் கான்கிரீட் தளம், வடிகால் வசதி,சுற்றுச்சுவர் அமைத்தல் பணிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    விழாவில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் குமார் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் லோகு பிரசாத்,ஊராட்சி துணைத்தலைவர் பாலசுப்பிரமணி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×