search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Luna-25"

    • 50 ஆண்டு காலமாக லூனா முயற்சிகளை நிறுத்தி வைத்தது தவறு
    • தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது

    1959-ல் தொடங்கி 1976 வரை தொடர்ச்சியாக பல விண்கலன்களை ரஷியா நிலவிற்கு அனுப்பியது. அதில் 15 விண்கல பயணம் வெற்றிகரமாக அமைந்ததால் உலகைமே ரஷியாவை வியந்து பார்த்தது.

    ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்காஸ்மாஸ் (Roscosmos), நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி அங்குள்ள கனிம வளங்கள் உட்பட பல்வேறு விவரங்களை குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக லூனா-25 எனும் விண்கலத்தை இம்மாதம் வாஸ்டோச்னி காஸ்மோடிரோமிலிருந்து (Vostochny Cosmodrome) நிலவிற்கு அனுப்பியது.

    ஆனால், ஆகஸ்ட் 19 அன்று அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து நொறுங்கியதால், இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

    இதுகுறித்து ராஸ்காஸ்மாஸ் நிலைய அமைப்பின் தலைவர் கூறியிருப்பதாவது:-

    நிலவிற்கு தொடர்ந்து விண்கலன்களை அனுப்பும் முயற்சிக்கு தடை போட கூடாது. அது ஒரு மோசமான முடிவாகி விடலாம். சுமார் 50 ஆண்டு காலம் இந்த முயற்சிகளை நிறுத்தி வைத்ததன் மோசமான பின்விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். அரசாங்கங்கள் இந்த திட்டத்தை இடைநிறுத்தம் செய்ததன் காரணமாக ஈடில்லாத நமது முந்தைய தலைமுறையினரின் தொழில்நுட்ப அறிவை நாம் கிட்டத்தட்ட இழந்து விட்டோம்.

    இறங்குவதற்கான சுற்றுப்பாதைக்கு முன்னதான சுற்றுப்பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தம் செய்ய வேண்டிய எஞ்சின் திட்டமிட்ட 84 வினாடிகளுக்கு பதிலாக 127 வினாடிகள் தொடர்ந்து செயல்பட்டது. இதனால் லூனா விழுந்து நொறுங்கியது. ஒரு தொழில்நுட்ப வல்லுனர்களின் குழு இதற்கான துல்லிய காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே இம்முறை ரஷியா அனுப்பிய லூனா-25 ஆராய்ச்சியில் பங்கு பெற்ற அனுபவம் வாய்ந்த 90 வயதான ரஷிய விண்வெளி ஆராய்ச்சியாளர் மிக்கெய்ல் மரோவ் (Mikhail Marov) இந்த தோல்வியினால் திடீரென உடல்நலம் குறைந்து, ரஷிய தலைநகரான மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இவர் ரஷியாவின் முந்தைய நிலவிற்கு விண்கலன்கள் அனுப்பும் முயற்சிகளில் பங்கேற்ற ஒரு தேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி வல்லுனராவார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

    நான் எவ்வாறு கவலைப்படாமலிருக்க முடியும்? நான் மருத்துவ கண்காணிப்பில் உள்ளேன். என்னுடைய வாழ்நாளின் ஆராய்ச்சி அனுபவம்தான் இந்த முயற்சி. இந்த தோல்வியால் என் உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா, கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் தனது சந்திரயான் திட்டத்தின்படி, சந்திரயான் 3 எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது என்பதும் தற்போது வரை திட்டமிட்டபடி தனது சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் இந்த விண்கலத்தை நாளை மாலை 06:04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • நேற்றைய தினம் லூனா 25-ன் சுற்றுவட்டப் பாதையை குறைக்கும்போது தொடர்பு துண்டிக்கப்பட்டது.
    • லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷியா விஞ்ஞானிகள் முயற்சித்த நிலையில் தோல்வி.

    நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ந்தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

    சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர்.

    லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை.

    தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வந்தது. இந்நிலையில், ரஷியாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதியதாக ரஷியா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நேற்று லூனா 25 விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிலவில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    லூனா-25 விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த ரஷிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

    • லூனா-25 விண்கலம் தரையிறங்குவதை தோல்வி அடைய செய்யுமா என்பதை ரஷிய விண்வெளி நிலையம் தெரிவிக்கவில்லை.
    • தொழில் நுட்ப கோளாறை சரி செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    மாஸ்கோ:

    நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக ரஷியா, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10-ந் தேதி விண்ணில் செலுத்தியது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு போட்டியாக ரஷிய விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திரயான்-3 விண்கலம் 23-ந்தேதி நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க ரஷிய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

    சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் கடந்த 17-ந்தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

    இதையடுத்து அதன் சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி லூனா-25 விண் கலத்தின் உயர குறைப்புகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர்.

    இந்நிலையில் லூனா-25 விண்கலத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலவில் தலையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இறுதிக் கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பின்னடைவு ஏற்பட்டதால் விண்கலத்தை திட்டமிட்டபடி அடுத்த சுற்றுப்பாதைக்கு அனுப்ப முடியவில்லை. தற்போதைய பாதையிலேயே ரஷிய விண்கலம் சுற்றி வருகிறது.

    இதுதொடர்பாக ரஷிய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் கூறும்போது, லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் வேளையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

    இந்த செயல்பாட்டின் போது தானியங்கி நிலையத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி இறுதி கட்ட செயல்முறையை மேற்கொள்ள முடியவில்லை. நிலைமையை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    இந்த திடீர் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    இந்நிகழ்வு, லூனா-25 விண்கலம் தரையிறங்குவதை தோல்வி அடைய செய்யுமா என்பதை ரஷிய விண்வெளி நிலையம் தெரிவிக்கவில்லை. தொழில் நுட்ப கோளாறை சரி செய்வதில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது.
    • வருகிற 23-ந்தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை ரஷியா கடந்த 11-ந்தேதி விண்ணில் ஏவியது. இந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்துள்ளது. அந்த விண்கலம் சுமார் 5 நாட்கள் நிலவை சுற்றி வரும்.

    வருகிற 21-ந்தேதி லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் இஸ்ரோ ஏவிய சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வருகிற 23-ந்தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும்
    • சந்திரயான்-3 தரையிறங்கும் நாளில், லூனாவும் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு

    இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது. வருகிற 23-ந்தேதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷியா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

    ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது.

    நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    • இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது.
    • ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை ஏவியுள்ளது.

    அந்த விண்கலம் வருகிற 23-ந்தேதி நிலவில் தரை இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரஷியாவும் லூனா-25 என்ற விண்கலத்தை நாளை விண்ணில் ஏவ உள்ளது. 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை லூனா-25 விண்கலம் அடையும் என்றும் பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர். ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது. நிலவின் பாதைகளில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    ×