என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லூனா"

    • இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது.
    • பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.

    லூனா 9 (Luna 9) என்பது நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலமாகும். இது சோவியத் ஒன்றியத்தால் (தற்போதைய ரஷியாவால்) ஏவப்பட்டது. இந்த விண்கலம் 1966-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அன்று நிலவின் 'மழைக்கடல்' (Oceanus Procellarum) பகுதியில் மென்மையாகத் தரையிறங்கியது.

    நிலவின் மேற்பரப்பில் இருந்து முதன்முதலில் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது லூனா 9 விண்கலமே ஆகும். நிலவின் மேற்பரப்பு மிகவும் மென்மையானது அல்ல, அதில் விண்கலங்கள் புதையாமல் நிற்க முடியும் என்பதை நிரூபித்தது.

    இது நான்கு இதழ்கள் போன்ற அமைப்புகளைக் கொண்டிருந்தது. இவை விரிந்து விண்கலத்தைச் சமநிலைப்படுத்த உதவின.இந்த விண்கலம் தரையிறங்கிய பின் சுமார் மூன்று நாட்களுக்கு இது பூமியுடன் தொடர்பில் இருந்து தகவல்களை வழங்கியது. அதன்பின்னர் பல தசாப்தங்களாக அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகாமல் மர்மமாகவே இருந்தது.

    இந்த நிலையில், லூனா 9 விண்கலத்தை கண்டுபிடிக்க இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.

    நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டர் (LRO) மூலம் சந்திர மேற்பரப்பின் படங்களை ஸ்கேன் செய்ய, அவர்கள் YOLO-ETA (You-Only-Look-Once-Extraterrestrial Artifact) எனப்படும் மேம்பட்ட இயந்திர கற்றல் வழிமுறையைப் பயன்படுத்தினர்.

    லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த லூயிஸ் பினால்ட் தலைமையிலான குழு, npj விண்வெளி ஆய்வு இதழில் முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவின் சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து புதிய அவதானிப்புகளைப் பயன்படுத்தி அவர்களின் மாதிரியின் கணிப்புகள் விரைவில் சோதிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

    • பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
    • சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது

    உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.

    1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.

    சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.

    1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.

    நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.

    ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.

    இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.

    ×