search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவின் லூனா-25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது
    X

    ரஷியாவின் லூனா-25 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது

    • ஐந்து நாட்களில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும்
    • சந்திரயான்-3 தரையிறங்கும் நாளில், லூனாவும் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு

    இந்தியா சந்திரயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய விண்ணில் செலுத்தியுள்ளது. வருகிற 23-ந்தேதி விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திரயான்-3 போன்று நிலவின் தென்துருவத்தை ஆராய ரஷியா லூனா-25 என்ற விண்கலத்தை உருவாக்கியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

    இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷியாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷிய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

    ரஷியா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன்பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்ப உள்ளது.

    நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று லூனா-25 ஆய்வு செய்யும் என்றும் 2021-ம் ஆண்டே விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக லூனா-25 விண்கலத்தை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×