search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery ticket seller"

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கருங்க ல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாஜ் நகரைச் சேர்ந்த சரவணன் மகன் விஜயகுமார் (வயது 34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ரூ. 220 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுந்தரபாண்டியன் என்பவரை போலீசார் பிடித்தனர்.
    • அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பஸ் நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவட்டம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் சுந்தரபாண்டியன் (வயது 43) என்பவரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 30 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
    • பெருமாளை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45)இவர் பிரபல லாட்டரி சீட்டு வியாபாரி. இந்நிலையில் பெருமாள் இவரது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து திண்டிவனம் தலவாதி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். 

    அப்போது பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெருமாளின் நண்பர்கள் 4 பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெருமாளை சரமாரியாக குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார்.பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்த ஓட்டலில் இருந்தவர்கள் மற்றும் அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ரோசணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த ரோசணை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாளை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரோசணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இவரது நண்பர்கள் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் பெருமாளுக்கும் இவரது நண்பர்களுக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி காரணமாக இவரை கத்தியால் குத்தினார்களா ? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக திண்டிவனம் முருகப்பாக்கத்தை சேர்ந்த அன்புராஜன், சாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் ஆகியோரை ரோசனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகியுள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கம்பம் வடக்கு போலீசார் சர்ச் தெரு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கம்பம்:

    கம்பம் வடக்குபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையிலான போலீசார் சர்ச் தெரு முன்பு ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது 8-வது வார்டு தாத்தப்பன்கோவில் தெருவை சேர்ந்த அப்பாஸ்(62) என்பவர் தடைசெய்யப்பட்ட லாட்டரிசீட்டுகளை வைத்திருந்தார்.

    போலீசார் அவரை கைது செய்து லாட்டரிசீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ×