search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Little Flower School"

    • மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    • விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு லிட்டில் பிளவர் கல்வி குழுமத்தின் தலைவர் மரியசூசை தலைமை தாங்கி பேசினார். அப்போது, மாணவர்கள் மகிழ்ச்சியோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

    விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் சஹானா உமர் செய்திருந்தார்.

    • 14-வது தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.
    • அறக்கட்டளை தலைவர் அமல் தாமஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் விவேகா கலாசார கல்வி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 14-வது தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.

    போட்டிகளை பள்ளி சேர்மன் மரிய சூசை தொடங்கி வைத்தார். விவேகா அறக்கட்டளை நிறுவனர் அழகேச ராஜா வரவேற்று பேசினார்.

    நெல்லை மாவட்ட யோகாசன சங்க பொரு ளாளர் பால சுப்பிர மணியன், அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி முதல்வர் ரெனால்ட் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவர் அமல் தாமஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு களை வழங்கினார். இயக்குனர் சத்யா நன்றி கூறினார்.

    இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் நடுவர்களாக டாக்டர் அதிசயராஜ், டாக்டர் குமார், டாக்டர் செல்வராஜ் ஆகியோர் செயல் பட்டனர். இப்போட்டிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 680 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். சிறந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசாக சைக்கிள் வழங்கப்பட்டது.

    • டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் மேல்நிலைப்பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    நெல்லை:

    டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் மாடல் மேல்நிலைப்பள்ளியில் கணித அறிவுத்திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மரியசூசை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் பிராங்கலின் கலந்து கொண்டார்.

    இதில் நடமாடும் கணினி என்று அழைக்கப்படும் பசவராஜ் சங்கர் உம்ராணி கலந்து கொண்டு மாணவர்களின் கணித அறிவினை ஊக்குவிக்கும் வகையில் 9 இலக்க எண்களின் கூட்டல், கழித்தல், 5 மற்றும் 3 இலக்க எண்களின் கூட்டல், வகுத்தல் உள்ளிட்டவற்றை விளக்கி கூறினார். மேலும் மாணவர்களின் பிறந்ததேதியை வைத்து அவர்களின் பிறந்த கிழமையையும், 30 இலக்க எண்களின் வரிசை முறையை முன்வரிசையிலும், பின் வரிசையிலும் சில நொடிகளில் கூறினார்.

    அதேபோல் கடிகார உதவியின்றி நேரத்தை சரியாக கூறினார். அவரை பாராட்டி பள்ளி தாளாளர் மரியசூசை ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மேலும் இந்தியன் டெவலப்மென்ட் பவுண்டேஷன் நிறுவனத்திற்கு காசோலையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை லிட்டில் பிளவர் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


    • நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மரியசூசை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அறிவியல் மைய நிர்வாகி குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    கண்காட்சியில் மாணவர்கள் பல்வேறு தலைப்புகளில் படைப்புகளை காட்சி படுத்தியிருந்தனர். இதனை சேவியர் பொறியியல் கல்லூரி, ஐன்ஸ்டீன் கல்லூரி விரிவுரையாளர்கள் மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களின் படைப்பு களை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மரியசூசை செய்திருந்தார்.

    ×