லிட்டில் பிளவர் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி

14-வது தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.அறக்கட்டளை தலைவர் அமல் தாமஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
லிட்டில் பிளவர் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி
Published on

நெல்லை:

நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் மற்றும் விவேகா கலாசார கல்வி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் 14-வது தென் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நெல்லை டவுன் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்றது.

போட்டிகளை பள்ளி சேர்மன் மரிய சூசை தொடங்கி வைத்தார். விவேகா அறக்கட்டளை நிறுவனர் அழகேச ராஜா வரவேற்று பேசினார்.

நெல்லை மாவட்ட யோகாசன சங்க பொரு ளாளர் பால சுப்பிர மணியன், அமைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பள்ளி முதல்வர் ரெனால்ட் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை தலைவர் அமல் தாமஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு களை வழங்கினார். இயக்குனர் சத்யா நன்றி கூறினார்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகள் மற்றும் நடுவர்களாக டாக்டர் அதிசயராஜ், டாக்டர் குமார், டாக்டர் செல்வராஜ் ஆகியோர் செயல் பட்டனர். இப்போட்டிகளில் நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 680 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். சிறந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசாக சைக்கிள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com