search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Law panel"

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால் ரூ.33,200 செலவாகும் என சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. #LawPanel #SimultaneousPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஒரே நேர தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது.

    அது குறித்து சட்ட கமிஷன் தனது அறிக்கையில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும். அந்தவகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதைப்போல அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியதாகவும் சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. #LawPanel #SimultaneousPolls 
    நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக செய்யப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் சிபாரிசு செய்ய உள்ளது. #SimultaneousPolls #LawPanel
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த முயன்று வருகிறது.

    வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடப்பதால், அதிக செலவு ஏற்படுவதுடன், நலத்திட்ட பணிகள் பாதிப்பு, பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், இந்த பாதிப்புகளை தவிர்க்க விரும்புகிறது.



    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையமும் சிபாரிசு செய்துள்ளது. இப்படி தேர்தல் நடத்த, மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலம் தொடர்பான அரசியல் சட்டத்தின் 83(2), 172(1) ஆகிய பிரிவுகளிலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.

    இந்த திருத்தங்கள் உள்பட சட்டரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய உள்ளது. இத்தகவல்களை சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்ட ஆணையத்தின் சிபாரிசுகள், மத்திய அரசை கட்டுப்படுத்தாது. இருப்பினும், இந்த சிபாரிசுகள், அரசியல் கட்சிகளிடையே ஒரு விவாதத்தை உருவாக்க உதவும் என்று கருதப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், சட்ட ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை 2 கட்டங்களாக செய்யலாம். 2019-ம் ஆண்டு, சில மாநிலங்களுக்கும், 2024-ம் ஆண்டு சில மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தலாம். இதற்காக, அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தங்கள் செய்ய வேண்டும். அவற்றுக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஒருவேளை, இடையிலேயே ஒரு அரசு கவிழ்ந்தால், புதிதாக அமையும் மாற்று அரசு, மீதி பதவிக்காலத்துக்குத்தான் பதவி வகிக்க வேண்டுமே தவிர, இன்னொரு 5 ஆண்டுகளுக்கு அல்ல.

    ஒரு அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்போது, அதன் பின்னாலேயே நம்பிக்கை தீர்மானமும் கொண்டுவர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லாதநிலையில், முந்தைய அரசையே நீடிக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SimultaneousPolls #LawPanel
    ஆன்லைன் வழியாக புகார் பெற்று, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி உள்ளது. #FIR #Online #LawPanel
    புதுடெல்லி:

    போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 154-ல் விளக்கம் தரப்பட்டு உள்ளது. அதன்படி, பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்வதற்கு ஏற்ற குற்றங்களை செய்தவர் பற்றிய தகவல் பெற்றால், கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.இந்த நிலையில் ஆன்லைன் வழியாக புகார் பெற்று, அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யலாமா என சட்ட ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி உள்ளது.

    இதை சட்ட ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

    இதற்கு இடையே ஆன்லைன் வழியாக பெறப்படுகிற புகார்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கு சட்ட திருத்தம் செய்தால், இந்த வசதியை தவறாக பயன்படுத்தி மற்றவர்களை களங்கப்படுத்துகிற நிலை உருவாகும் என பல தரப்பிலும் தெரிவித்து உள்ளனர்.

    இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் சட்டத்துறை செயலாளர் ஒருவர் குறிப்பிடும்போது, “பிடிவாரண்டு இல்லாமல் கைது செய்வதற்கு உரிய குற்றங்களை செய்கிறபோது, சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் வழி காண வேண்டும்” என்று கூறினார்.  #FIR #Online #LawPanel
    ×