search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Land Donation"

    • 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது
    • நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிலச்சீர்திருத்தம் நிலம் மற்றும் பூமிதான நிலங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தலைமையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தெரிவித்ததாவது:-

    நிலச்சீர்திருத்த சட்டம் பிரிவு 37எ – ன் கீழ் அனுமதி பெற்ற தொழில் நிறுவனங்கள்,அனுமதி பெற்ற நிலங்களை உரிய பயன்பாட்டில் வைத்துள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நிபந்தனை மீறப்பட்டுள்ளதா என்பதை மாதந்தோறும் தணிக்கை செய்யவும், நீதிமன்ற வழக்குளில் உள்ள நிலங்கள் தொடர்பாக எதிர்வாதங்களை உடன் தாக்கல் செய்யவும், பூமி தானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுத்து நிலங்களை பாதுகாக்கவும், நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் ,உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த கண்ணன், உதவிஆணையர் (கலால்) ராம்குமார், உதவி இயக்குநர் (நிலஅளவை) சசிக்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயி தானமாக கொடுத்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிலாஸ்பூர்:

    இமாச்சல பிரதேசத்தில் விவசாயி ஒருவர் 3 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

    பிலாஸ்பூர் மாவட்டம் கார்சி சவுக் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாகீரத் சர்மா (வயது 74), சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவரது நான்கு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இரண்டு மகன்கள் உள்ளனர். ஒரு மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறார், மற்றொரு மகன் டாக்சி டிரைவராக உள்ளார்.

    இந்நிலையில், அவரது கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் வருவாய்த் துறையின் கணக்காளர் அலுவலகம் கட்டுவதற்கு நிலம் தேவைப்பட்டது. நிலம் வாங்குவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதை அறிந்த விவசாயி பாகீரத் சர்மா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வருவாய்த்துறைக்கு தனது 3 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    அந்த அலுவலகம் கட்டப்பட்டால் 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4000 மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சாதாரன நிலத் தகராறுகளால் சண்டை ஏற்பட்டு சில நிமிடங்களில் உறவுகள் முறியும் இந்த காலகட்டத்தில், பாகீரத் சர்மா, ஒரு முன்மாதிரியாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    ×