search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூமி தான நிலங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்
    X
    ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

    பூமி தான நிலங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

    • 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது
    • நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நிலச்சீர்திருத்தம் நிலம் மற்றும் பூமிதான நிலங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தலைமையில், கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் நிலச்சீர்திருத்தத்துறை ஆணையர் வெங்கடாச்சலம் தெரிவித்ததாவது:-

    நிலச்சீர்திருத்த சட்டம் பிரிவு 37எ – ன் கீழ் அனுமதி பெற்ற தொழில் நிறுவனங்கள்,அனுமதி பெற்ற நிலங்களை உரிய பயன்பாட்டில் வைத்துள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளுதல் மற்றும் 37பி – ன் கீழ் அனுமதி பெற்று கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் நடத்தும் பொது அறக்கட்டளைகள் உரிய பயன்பாட்டில் உள்ளது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நிபந்தனை மீறப்பட்டுள்ளதா என்பதை மாதந்தோறும் தணிக்கை செய்யவும், நீதிமன்ற வழக்குளில் உள்ள நிலங்கள் தொடர்பாக எதிர்வாதங்களை உடன் தாக்கல் செய்யவும், பூமி தானங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுத்து நிலங்களை பாதுகாக்கவும், நகர்ப்புற நிலவரி நிலுவையில் இல்லாமல் வசூல் செய்யவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம்,உதவி கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் ,உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த கண்ணன், உதவிஆணையர் (கலால்) ராம்குமார், உதவி இயக்குநர் (நிலஅளவை) சசிக்குமார் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×