search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lalu son"

    பீகார் மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி உறுதி என்று லல்லு மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். #TejashwiYadav #congress #mayawati #akhileshyadav

    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைக்க முயற்சித்து வரும் அதே வேளையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தனியாக கூட்டணி அமைத்து உள்ளன. அதில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை.

    இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட்ட நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவரும், லல்லுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் உத்தரபிரதேசத்திற்கு சென்று அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோரை சந்தித்து பேசினார்.

    பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. அங்கு இந்த கட்சி காங்கிரசுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    இந்த நேரத்தில் தேஜஸ்வி யாதவ் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் மற்றும் மாயாவதியை சந்தித்ததால் அவரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற பேச்சு அடிபட்டது.

    இந்த நிலையில் பாட்னாவில் மகர சங்கராந்தியை யொட்டி நேற்று காங்கிரஸ் சார்பில் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தேஜஸ்வி யாதவ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது தேஜஸ்வி யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாயாவதியும், அகிலேஷ் யாதவும் என்னைவிட மூத்தவர்கள். மரியாதை நிமித்தமாக அவர்களை சந்தித்து பேசினேன். கூட்டணி தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை.

    காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி என்பது மிக பழமையான கூட்டணி. இதை எனது தந்தை லல்லுபிரசாத்தும், சோனியா காந்தியும் பரஸ்பர நம்பிக்கையுடனும், புரிதலுடனும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். எங்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கிறது.

    காங்கிரசை பொறுத்த வரை தேசிய அளவில் மிகப்பெரிய அரசியல் கட்சி. அதனுடன் நல்ல கூட்டணியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அதில் மாற்றம் எதுவும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #TejashwiYadav #congress #mayawati #akhileshyadav

    நிதிஷ்குமார் ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது என்று பீகாரில் நடந்த பேரணியில் லல்லு மகன் தேஜஸ்வி யாதவ் பேசியுள்ளார். #Tejaswi #nitishkumar #lalu

    பாட்னா:

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன.

    அதன்பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற பா.ஜனதா நிதிஷ்குமாருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டுள்ளது.

    நிதிஷ்குமார் அமைச்சரவையில் மந்திரிகளாக இடம் பெற்று இருந்த லல்லு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் ஆகியோர் ராஜினாமா செய்து விட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.

    லல்லுபிரசாத் யாதவ் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. அவரது மகன்கள் இருவரும் கட்சியை வழி நடத்திச் செல்கிறார்கள்.

    நேற்று பாட்னாவில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 22-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாட்னாவில் நடந்த பேரணியில் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் கலந்து கொண்டனர்.

    அப்போது முதல்-மந்திரி நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-


    கடந்த தேர்தலில் நிதிஷ்குமாருடன் லல்லுபிரசாத் யாதவ் கூட்டணி அமைத்தார். நிதிஷ்குமாரை முதல்-மந்திரி நாற்காலியில் அமர வைக்க பல தியாகங்கள் செய்தார். நிதிஷ்குமார் ஏதாவது தியாகம் செய்துள்ளாரா?

    இப்போது நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நேரம் வந்து விட்டது. நீங்கள் ஓய்வு பெறுங்கள் அல்லது மக்கள் உங்களுக்கு நிரந்தர ஓய்வு கொடுத்து விடுவார்கள். 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் என்னை மெகா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து உள்ளார்கள்.

    இப்போது எனக்கு நிதிஷ் குமார் முதல்-மந்திரி பதவி தருவதாக கூறினாலும் அதை நான் ஏற்கமாட்டேன். மக்கள் ஆசியுடன் நான் முதல்-மந்திரி ஆவதற்கு இன்னும் காலம் உள்ளது.

    நிதிஷ்குமாருக்கு அரசியல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள்தான் அரசியலில் நீடிக்க முடியும். வருகிற தேர்தலில் சமதர்மத்துக்கும், ஆர்.எஸ்.எஸ். மதவாத சக்திகளுக்கும் இடையேதான் நேரடி போட்டி.

    பீகார் சட்டசபையின் பதவி காலம் 2020-ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து முன்கூட்டியே பீகார் சட்டசபைக்கும் தேர்தல் வரும். தற்போது நிதிஷ்குமார் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறார். அவர் அங்கு இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார் #Tejaswi  #nitishkumar #lalu

    ×