search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kashmiri Pandits"

    • காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மாநில பாஜக கண்டனம்.
    • காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறி விட்டதாக அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு.

    சோட்டி போரா: 

    ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காஷ்மீர் பண்டிட் ஒருவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் படுகாயம் அடைந்தார். சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிபோரா பகுதியில் இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது.

    உயிரிழந்தவர் சுனில் குமார் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது சகோதரர் பிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


    இந்த கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, இந்துக்களை குறி வைத்து நடத்தப்பட்ட கோழைத்தன தாக்குதல் இது என குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரில் இரத்தக் களரி சூழலை பாகிஸ்தான் விரும்புகிறது, அதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜூன் மாதம் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் விஜய்குமார் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  காஷ்மீரில் சிறுபான்மை மக்களாக உள்ள இந்துக்களை குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.

    இந்நிலையில் காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட்டுகளை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநரை நியமித்து பாஜக ஆட்சி செய்கிறது. ஆனால் அது தோல்வி அடைந்து விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பண்டிட்கள் இப்போது காஷ்மீரை விட்டு வெளியேற விரும்புகிறார்கள், இது பிரதமர் மோடியின் தோல்விக்கு மற்றொரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார். 

    • பண்டித் சமூகத்திற்கு ஆதரவாக அவர்களுக்கு பின்னால் மகாராஷ்டிரா இருக்கும்.
    • காஷ்மீர் பண்டிட்டுகள் குறி வைத்து கொல்லப்படுகின்றனர்.

    மும்பை :

    காஷ்மீரில் இந்துக்கள், பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காஷ்மீரில் இந்துக்கள், பண்டிட்டுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவம் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு அவர்களின் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் திரும்புவது கனவாக உள்ளது. ஆனால் அவர்கள் குறி வைத்து கொல்லப்படுகின்றனர். பண்டிட்டுகளின் வெளியேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது.

    பண்டித் சமூகத்திற்கு ஆதரவாக அவர்களுக்கு பின்னால் மகாராஷ்டிரா இருக்கும். காஷ்மீர் பண்டிட் தலைவர்களுடன் அரசு தொடர்பில் உள்ளது. அவர்களின் பாதுகாப்புக்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    1995-ம் ஆண்டு சிவசேனா ஆட்சியின் போது மகாராஷ்டிராவில் காஷ்மீர் பண்டிட் பிள்ளைகளுக்கு கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை பால் தாக்கரே உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

    பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் வரை பணிக்கு வர மாட்டோம் என்று காஷ்மீர் பண்டிதர்கள் பணியில் சேர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
    காஷ்மீர்:

    மே மாதம் 12-ந் தேதி காஷ்மீர் பண்டிதர் சமுதாயத்தைச் சேர்ந்த ராகுல் பாத் என்ற அரசு ஊழியர் அவரது அலுவலகத்தில் வைத்து  பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர்  பண்டிதர்கள் ராகுல் பாத்தின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    மேலும், பள்ளத்தாக்கில் உள்ள பண்டித் இனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தொழிலாளர்கள் இனி காஷ்மீரில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

    இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் லெப்டினண்ட் கவர்னர் மனோஜ் சின்கா, ஷெய்க்பூரில் உள்ள இடம்பெயர் தொழிலாளர்களான காஷ்மீர் பண்டிதர்கள் முகாமிற்கு இன்று சென்று தொழிலாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “இந்த நிர்வாகம் தொழிலாளர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளது. உங்களது பிரச்சினைகள் நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்க்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

    இருப்பினும், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்  ஜம்முவில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறினர்.
    ×