என் மலர்
நீங்கள் தேடியது "JoB Scam"
- தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
- தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் எச்சரிக்கையாக இருங்கள்.
மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு சட்டவிரோத வேலைகள், சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சைபர் குற்றங்களில் ஈடுபட மறுப்பவர்கள் வேலை அளிப்பவர்களால் மின்சாரம் பாய்ச்சியும், பணயக்கைதிகளாகவும் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இவ்வாறு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், மியான்மர் - தாய்லாந்து எல்லை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கால் சென்டரில் சைபர் குற்றங்களில் ஈடுபட பணியில் அமர்த்தப்பட்ட 283 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று முன் தினம் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 266 இந்தியர்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சைபர் கிரைம் மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 266 இந்தியர்களை நேற்று இந்திய விமானப்படை (IAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அழைத்து வர இந்திய அரசு ஏற்பாடு செய்தது. முன்னதாக திங்களன்று, 283 இந்தியர்களும் இதேபோல் திருப்பி அனுப்பப்பட்டனர்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
மேலும் இந்த விவகாரத்தில் இந்திய தூதரகங்கள் மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதன்படி இதுவரை 549 இந்தியர்கள் மீட்டு தாயகம் அழைத்துவரப் பட்டுள்ளனர்.
மேலும் தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை என அழைப்புகள் வந்தால் அது தொடர்பாக முழுமையாக விசாரித்துவிட்டு செல்ல வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
- கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் சூர்யா சலபதி ராவ். இவர் கடற்படையில் தளபதியாக வேலை செய்து வருவதாக கூறி பலரிடம் அறிமுகம் செய்து கொண்டார் .
விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தார்.
மேலும் போலியான சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கினார்.
இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கடற்படை வளாகத்தில் அக்னிபாத் திட்டத்தில் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கியது.
சூர்யா சலபதி ராவ் கொடுத்த போலி சான்றிதழ்களுடன் சிலர் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யும் முகாமில் கலந்து கொண்டனர் .அப்போது முகாமில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.
இதில் பல்வேறு பட்டதாரிகளின் சான்றிதழ்கள் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. போலி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டவர்களிடம் ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது சூர்யா சலபதி ராவ் சான்றிதழ் வழங்கியதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ராணுவ அதிகாரிகள் சூர்யா சலபதிராவை பிடித்து விசாரணை நடத்தியதில் போலி சான்றிதழ்கள் தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. ராணுவ அதிகாரிகள் இது குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சூர்யா சலபதி ராவை கைது செய்து அவரிடமிருந்து கார், கடற்படை அதிகாரிகளுக்கான உடைகள், செல்போன், லேப்டாப், போலி அடையாள அட்டை, போலி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் சூர்யா சலபதி ராவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






