search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewels robbery"

    பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 13 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அசோக்குமார், சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ஜெயப்பிரதா (வயது39).

    இவர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு அங்குள்ள பூ மார்க்கெட் சாலையில் நடந்து வந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயப்பிரதா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் ஜெயப்பிரதா போராடினார். இருப்பினும் மர்ம மனிதர்கள் 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சுப்பிரமணியபுரம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி உமாதேவி (35). ஜெராக்ஸ் கடை ஊழியரான இவர் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    வசந்தம் நகர் 2-வது தெருவில் வந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத் தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    விளாங்குடி சமாதான நகர் தெருவைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிரியாபுஷ்பம் (57). இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை சிரியாபுஷ்பம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. கூடல்புதூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. கொள்ளைபோய் இருப் பதாக சிரியாபுஷ்பம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர் அருகே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 60 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை அவை வைக்கப்பட்டு இருந்த லாக்கரோடு மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    திரு.வி.க. நகர்:

    சென்னை பெரம்பூரை அடுத்த பெரியார் நகர் கந்தசாமி சாலையில் வசித்து வருபவர் தங்கவேலு (வயது 63). இவர் தமிழக அரசின் தொழிலாளர்துறை பிரிவில் இணை ஆணையராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. 2-வது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

    இதனால் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தங்கவேலு மனைவி மற்றும் மகளுடன் கடந்த 9-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை தங்கவேலுவின் வீட்டின் பின்புறம் உள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வீட்டின் உரிமையாளர் தங்கவேலுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, இன்ஸ்பெக்டர் பரணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    வீட்டின் முதல் தளத்தில் 3 அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் நகைகள் வைக்கப்பட்டு இருந்த லாக்கரை மர்மநபர்கள் அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர். அந்த லாக்கரில் சுமார் 60 பவுன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

    மதுரையில் இருந்து தங்கவேலு வந்த பிறகு தான் கொள்ளைபோன நகைகளின் மதிப்பு எவ்வளவு? என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் விரைந்து சென்று கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நன்கு திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பூர் மற்றும் காசிமேட்டில் 5 இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட 6 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    பெரம்பூர் பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியை சேர்ந்தவர் ரேவதி (38).

    இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8.30 மணியளவில் வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

    வீட்டின் அருகே ரேவதி வந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், ரேவதி கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனர். அவர் ‘திருடன் திருடன்’ என்று கத்தினார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வருவதற்குள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பூர் வெற்றிநகர் ராஜா தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல் அமீது (77). இவர் ஒரு அமைப்பின் பொறுப்பாளராக இருக்கிறார்.

    நேற்று இரவு 9 மணிக்கு அப்துல் அமீது ரூ.1 லட்சம் பணத்தை ஒரு பையில் கொண்டு வந்தார். வீட்டின் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவருடைய கையில் இருந்த பணப்பையை பறித்து சென்றனர். அவர் சத்தம் போட்டும் பயன் இல்லை. இதுபற்றி திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    வெற்றிநகர் வரதன் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ஸ்ரீதர் (16). பள்ளி மாணவர். இவர் நேற்று இரவு 8 மணியளவில் டியூ‌ஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். செல்போனில் பேசிக் கொண்டே நடந்து வந்தார்.

    அப்போது, ஒரு ஆட்டோவின் அருகே நின்று கொண்டிருந்த 4 பேர், மாணவன் ஸ்ரீதரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டனர். இது குறித்து திரு.வி.க நகர் போலீசில்புகார் செய்யப்பட்டது.

    போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த வழிப்பறியில் ஈடுபட்ட அஜீத், அப்பாஸ், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் இருந்து 2 சேல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்ற வழிப்பறி சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    காசிமேடை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜீத். இவர் சூர்யநாராயண தெருவில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அஜித்திடம் இருந்த செல்போனை பறித்து தப்பினர்.

    இதே போல் ராயபுரம் மேம்பாலம் அருகே சித்ரா என்பவரிடம் மர்மநபர்கள் செல்போனை பறித்தனர். இதுபற்றி காசிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் விசாரணை நடத்தினார்.

    செல்போன் பறிப்பில் ஈடுபட்ட புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த தமிழ் செல்வன், கொருக்குபேட்டை மணி கண்டன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×