search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லாபுரத்தில் 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு
    X

    வில்லாபுரத்தில் 2 பெண்களிடம் 13 பவுன் நகை பறிப்பு

    பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 13 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அசோக்குமார், சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ஜெயப்பிரதா (வயது39).

    இவர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு அங்குள்ள பூ மார்க்கெட் சாலையில் நடந்து வந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயப்பிரதா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் ஜெயப்பிரதா போராடினார். இருப்பினும் மர்ம மனிதர்கள் 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சுப்பிரமணியபுரம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி உமாதேவி (35). ஜெராக்ஸ் கடை ஊழியரான இவர் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    வசந்தம் நகர் 2-வது தெருவில் வந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத் தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    விளாங்குடி சமாதான நகர் தெருவைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிரியாபுஷ்பம் (57). இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை சிரியாபுஷ்பம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. கூடல்புதூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. கொள்ளைபோய் இருப் பதாக சிரியாபுஷ்பம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×