என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelery and cash robbery"

    • 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
    • நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 64).

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீேராவை திறந்து அதில் இருந்த வளையல், செயின், கம்மல், மோதிரம் உள்பட 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    கதவு திறந்து இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிக்கந்தருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தார்.

    அப்போது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.  

    • பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயின் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் சேத்துமடை அருகே உள்ள நரிக்கல்பதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது மனைவி மகாதேவி (வயது 38). இவர் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.

    இவர் தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயினை வைத்து இருந்தார்.

    சம்பவத்தன்று மகாதேவி பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயின் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • ஆண்டிபட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
    • போலீசார் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் பணிபுரிவதால் அவரது மனைவி அனிதா (வயது 23) மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் அனிதாவின் மாமனார் கேரளாவுக்கு வேலைக் குசென்று விட்டார். இவரும் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார்.

    மீண்டும் வீடு திரும்பிய போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×