என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆண்டிபட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- ஆண்டிபட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
- போலீசார் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார். ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் பணிபுரிவதால் அவரது மனைவி அனிதா (வயது 23) மாமனார், மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அனிதாவின் மாமனார் கேரளாவுக்கு வேலைக் குசென்று விட்டார். இவரும் வேலை விஷயமாக வெளியே சென்றுள்ளார்.
மீண்டும் வீடு திரும்பிய போது பீரோ உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story






